செய்திகள் :

Stalin: ``பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி..'' - அதிமுகவை கடுமையாகச் சாடிய ஸ்டாலின்

post image

சட்டபேரவையில் இன்று ( ஏப்ரல்27) ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். "எதிர்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாத வகையில் பொத்தாம் பொதுவாக குற்றசாட்டுகளைச் சொல்லும் காரணத்தால் சில விளக்கங்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் (எடப்பாடி)அவரது ஆட்சியின் சில சாதனைகளைத் தலைப்பு செய்தியாகச் சொன்னார். அதேபோல இப்போது நடந்துகொண்டிருக்கக்கூடிய ஆட்சியில் சில விஷயங்களைத் தலைப்பு செய்தியாகச் சொன்னார். ஆனால் தமிழ்நாட்டு மக்களைக் கேட்டால் அவரது ஆட்சியில் நடந்த விஷயங்களைக் கண்ணீருடன் புலம்புவார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி, சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு சாத்தான்குளமே சாட்சி, துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிசூடே சாட்சி, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்த ஆட்சி.

தமிழ்நாட்டு மக்களின் புலம்ப வைத்ததே அதிமுக ஆட்சியின் சாதனை. எங்கும் எதிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என எதிலும் ஊழல். அந்த ஊழலில் இருந்துத் தப்பித்துக்கொள்ளத் தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் அடகு வைத்தது யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

எதிர்கட்சித் தலைவர் தலைமையில் ஆட்சி நடந்ததை விட திமுக ஆட்சியின் இந்த நான்கு ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்திருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஒப்பிடும்போது 2024 ஆண்டில்தான் கொலை சம்பவங்கள் குறைந்திருக்கிறது.

இபிஸ்
இபிஸ்

அதிமுக ஆட்சியில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ரவுடிகள் 1929 பேர் என்றால் திமுக ஆட்சியில் 3645 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்நிலைய மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டிருக்கிறது.

எனவே நான் இங்கே குறிப்பிடுவது திமுகவின் சட்ட ஒழுங்கைப் பற்றி பேச அதிமுகவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! - அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?* "கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தி... மேலும் பார்க்க

Stalin-ஐ கோபப்படுத்திய Ponmudi! Vijay தரும் கோவை ஷாக்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,'பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி' ஆகியோர், தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் ஈரோடு முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சிவசங்கர், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு ... மேலும் பார்க்க

Maoists: ``ஆதிவாசி சமூகங்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும்'' - அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்!

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையின் கரேகுட்டலு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைத் தேடிவந்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே து... மேலும் பார்க்க

தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்; மிரட்டும் அமெரிக்கா - இனி என்ன தான் ஆகும்?

2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்று ஆண்டுகள் கடந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளின் உதவி மற்றும் ஆதரவினால், சிறிய நாடான உக்ரைன் ரஷ்யாவை எத... மேலும் பார்க்க

`குளிரூட்டப்பட்ட அறையில் குங்குமப்பூ விவசாயம்' - சாதித்த கேரள இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி!

குங்குமப்பூ நம் நாட்டில் காஷ்மீர் மட்டுமே நல்லபடியாக விளைச்சலை கொடுத்து வருகிறது. காஷ்மீரில் நிலவும் சீதோஷ்ண நிலைதான் குங்குமப்பூ விளைச்சலுக்கு கைகொடுக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் குங்குமப்பூ விவசா... மேலும் பார்க்க