விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்;...
Thandakaranyam: ``புதிய களம், புதிய கதை, சொல்லப்படாத கதாபாத்திரங்கள்" - நடிகை ரித்விகா
இரண்டாம் உலக்கப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷனில் தயாரான இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும்.
இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சில் சென்னையில் நடைபெற்றது. அதில், இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் கலையரசன், தினேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

முதலில் பேசிய நடிகை ரித்விகா, ``இயக்குநர் அதியன் ஆதிரையின் இயக்கத்திலும், நீலம் புரொடெக்ஷனிலும் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.
தொடர்ந்து என் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு நன்றி. தண்டகாரண்யம் புதிய களம், புதிய கதை, சொல்லப்படாத கதாபாத்திரங்கள்.
இயக்குநர் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில், எந்த சமரசமுனின்றி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
என்னுடன் நடித்த எல்லா நடிகர்களுக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் இல்லை என்றால் இந்தப் படமே இல்லை. இந்தப் படத்துக்கான கதை களம் அவ்வளவு சிரமமான இடம்.
நல்லப் படத்துக்கு எப்போதும் உங்களிடமிருந்து முழுமையான ஆதரவு வரும் என்பது எங்களுக்குத் தெரியும். அதன் அடிப்படையில் இந்தப் படத்துக்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகை விஷ்னு ரேச்சல், ``மாடலிங் துறையில் இருந்ததால் எனக்கு கேமரா முன்பு இருப்பது பெரிய சிக்கல் இல்லை.
ஆனால், என்னுடைய முதல் படமே இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் தான். என் தாய் மொழி மலையாளம் என்பதால் எனக்கு தமிழ் பெரிதாகத் தெரியாது.
அப்போதே என்னால் முடிந்தவரை தமிழைக் கற்று நடிக்கத் தொடங்கினே. அதன் பிறகு மூன்று நான்கு படங்கள் நடித்து விட்டேன்.
அப்போதுதான் இந்தப் படத்துக்கான ஆடிஷன் நடந்தது. அதில் நான் சரியாக நடிக்கவில்லை. என் தமிழும் சரியாக இல்லை. இந்தப் படத்தில் வரும் கிராமத்துத் தமிழும் மிகவும் முக்கியம்.
இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. எனக்கு இயக்குநர் மீது மிகப்பெரிய அன்பும், நன்றியும் இருக்கிறது.
படம் ஒப்பந்தமானதிலிருந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து இயக்குநர் அலுவலகம் சென்று, தமிழைக் கற்று, படத்தின் முழு வசனத்தையும் மனப்பாடம் செய்துக்கொண்டுதான் படப்பிடிப்புக்கே சென்றேன்.
எனக்கு நம்பிக்கை கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான படம்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...