Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
Travel Contest: ஊர் சுற்றுவது மட்டும்தான் சுற்றுலாவா? குடும்பச் சுற்றுலாவில் இதையும் பண்ணி பாருங்க!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சுற்றுலா ஒரு அருமையான எனர்ஜி கெய்னர்/ பூஸ்டர். பள்ளி செல்லும் பிள்ளைகள், கல்லூரி செல்லும் பிள்ளைகள், அலுவலகத்தில் வேலை செய்வோர், இல்லத்தரசிகள், தொழில் முனைவோர் என எல்லா வயதினரும் அவரவர்களின் தினசரி வாழ்க்கையில் வாழ்வியல் தேவைகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த தொடர் ஓட்டம் ஒரு கட்டத்தில் அவர்களுக்குத் தீர்க்க முடியாது அலுப்பையும் அயர்ச்சியும் தந்துவிடுகிறது. அத்தகைய சூழலில் அவர்களின் மனது தினசரி இயல்பிலிருந்து ஒரு மாறுதலைத் தேடுகிறது. அங்கேதான் அனைவருக்கும் அவசியமாகிறது ஒரு சுற்றுலா.
அதிலும் சுற்றுலாவைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் செல்லும் பொழுது அது ஒரு உற்சாகத்தைத் தருகிறது. மனதிற்குள் விவரிக்க முடியாத சந்தோஷத்தைத் தருகிறது.
அதிலும் குறிப்பாக குடும்பத்தினருடன் போகும்போது விட்டுக் கொடுத்தல், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் இப்படி நிறைய விஷயங்கள் எளிதில் சாத்தியமாகும்
பெரும்பாலும் எங்கள் கூட்டுக் குடும்பத்தில் நாங்கள் நான்கு வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்தினருடன் கண்டிப்பாகச் சுற்றுலா செல்வோம். மனதில் இருக்கும் விஷயங்களை ஷேர் பண்ணிக் கொள்ளுவோம்.
ஒருவரிடம் பிடித்த விஷயங்கள் பிடிக்காத விஷயங்கள் இவை அனைத்தையும் தெரிந்துகொள்ளுவோம்.
ஒவ்வொருவரின் தனித் திறமைகளைக் கண்டு கொள்வோம். பிள்ளைகளோடு பிள்ளைகளாக நாங்களும் அந்த வயதிற்கே சென்றுவிடுவோம்.

நானும் எனது ஓரகத்தியும் நாங்கள் தங்கியிருக்கும் உணவகங்களில் எந்தெந்த சமையல் ரெசிபி புதுவிதமாக இருக்கிறது. அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
அந்த ஊரில் மிகவும் வித்தியாசமான பொருள் என்ன? அது உணவுப் பொருளாக இருந்தாலும் சரி! கலைப் பொருளாக இருந்தாலும் சரி! அதைப் பற்றி ஆர்வமாய் தெரிந்துகொள்வோம்.
இப்படி ஒரு நான்கைந்து குடும்பங்களாகச் செல்லும் பொழுது பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
பெரியவர்கள் குடும்பக்கதை, சினிமா கதை, அவர்களின் பள்ளி வாழ்க்கை இப்படிப் பலவற்றைப் பேசி ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம்.
பெரும்பாலும் இப்படி குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது முடிந்தவரைச் சின்ன சின்ன துரித உணவுகளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
சில நாட்கள் பார்க்க வேண்டிய இடங்களை வெளிச்சத்திற்குள் பார்த்துவிட்டு எடுத்துப் போயிருக்கும் துரித உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டு விட்டு, பாட்டுக்குப் பாட்டு, வார்த்தை விளையாட்டு, கண்ணாமூச்சி, தாயம், பிஸினஸ் இப்படிப் பலவித விளையாட்டுகளை விளையாடிய பின் தூங்கச் செல்லலாம்.
இது எல்லாமே நம் குடும்பத்தினரோ அல்லது நட்புகளுடனோ பயணப்படும் பொழுதுதான் சாத்தியமாகும்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் குடும்பமாகச் செல்லும்போது செலவுகள் (பயணத்திற்கு ஆகும் செலவு) பாதியாகக் குறையும்.
*இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எப்பொழுதும் குடும்பத்துடன்தான் செல்ல வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழுவது நிச்சயம். ஆம் இதற்கும் நான் பதில் வைத்திருக்கிறேன்.
நான்கு வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் பயணம் செய்தால் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகத் தனியாகச் செல்லுங்கள்.
அப்படிச் செல்லும் பொழுது கணவன் மனைவிக்கு இடையே இருக்கிற அன்பு கூடும். ஒருவருக்கொருவர் புரிந்து புரிந்துகொள்ளும் விதம் அதிகப்படும்.
பிடித்த விஷயங்களைப் பற்றிப் பேச... திருமணமான போது இருந்த விஷயங்களைக் கிண்டல் செய்து கொண்டு பேச...
"அப்பொழுது அப்படி நீ இருந்தாய்.
இப்போ இப்படி ஆயிட்டாங்க உங்க அம்மான்னு அப்பாவும்",
"அப்போதெல்லாம் எவ்வளவு
சினிமா பார்ப்பார் தெரியுமா?
வாரத்திற்கு நான்கு நாட்கள் இரவுக்காட்சி சென்றுவிடுவோம்"
"சென்னையில் நாங்க போகாத சினிமா திரையரங்கமே கிடையாது. இப்ப என்னடான்னா சினிமான்னாலே தூரம் ஓடறார்"ன்னு சொல்ல, பிள்ளைகள் அப்படியா என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள்..
இப்படிப் பிள்ளைகளுக்குத் தெரியாத பல விஷயங்களை எல்லாம் சொல்லும்போது நம்மை அறியாமல் நம் மனதிற்கு ஒரு உற்சாகம் வரும் சந்தேகமே இல்லை.
இப்படி ஒருவருக்கு ஒருவர் சீண்டி கொண்டு நமக்கே நமக்கான உலகத்தில் மகிழ்வாக இருக்கத் தனியே செல்லுதல் அவசியம்.
எப்படியோ... சுற்றுலா பொழுதுபோக்கு மட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளவும் தெளிவு பெறவும் நமக்கு வாய்க்கும் அருமையான பயணம். அதிக பயணம் செய்தவர்கள் அதிகமான அனுபவங்களுடன் உலா வருகிறார்கள்.
குணம் பழக்கவழக்கங்கள் வாழ்வியல் மதிப்பீடுகள் சிந்தனைகள் என மற்றவர்களை விட அவர்கள் எல்லாவிதங்களிலும் ஒரு படி மேலே உயர்த்துவதற்குச் சுற்றுலாப் பயணங்கள் உதவும்.
வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளப் போய் வருவோம் ஒரு உலா... சுற்றுலா!
என்றென்றும் அன்புடன்
- ஆதிரை வேணுகோபால்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.