செய்திகள் :

Trump Tariff : `சீன பொருட்களுக்கு 104% வரி' - அதிரடியாக அறிவித்த அமெரிக்கா

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 சதவீத வரி விதித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் அளவுக்கு வரி விதித்து இருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய சீனா, "சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் மீது 34 சதவிகித வரி விதிக்கப்படும். இது வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது" என்று அறிவித்தது. இது சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தக போரை கிளப்பியிருக்கிறது.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்|'
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்|

"இந்த வரியை நீக்காவிட்டால் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும்" என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், சீனப் பொருட்கள் அனைத்திற்கும் கூடுதலாக 50 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் சீன பொருட்களுக்கான அடிப்படை வரியாக 10%, ஏற்கனவே அமலில் உள்ள 10%, தற்போது புதிதாக ட்ரம்ப் விதித்த வரி 34% மற்றும் தற்போது அமெரிக்க அரசு உயர்த்தியுள்ள 50% என சீனப் பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் மொத்தம் 104 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது உலக அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியிருக்கிறது.

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க

TASMAC Raid: "பொய் தகவல் கூறி வழக்கை திசைதிருப்ப முயற்சி" - தமிழக அரசை குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள், இன்று நீதி... மேலும் பார்க்க