செய்திகள் :

UP : `வருங்கால மருமகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியது ஏன்?’ - விசாரணையில் பெண் சொன்னதென்ன?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த சப்னா என்ற பெண்ணின் மகளுக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், சப்னா தனது வருங்கால மருமகனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். வீட்டை விட்டு வெளியேறும்போது மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.3.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை சப்னா எடுத்து சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் தேடி வந்தனர். அவர்கள் இருவரும் திடீரென போலீஸில் சரணடைந்துள்ளனர். `ஏன் வருங்கால மருமகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்?’ என்பது குறித்து சப்னாவிடம் போலீஸார் விசாரித்தபோது, பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது.

போலீஸில் சொன்னது என்ன?

சப்னாவை அவரது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்துள்ளாராம். அதோடு சப்னாவிடம் அவரது மகளும் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். எனவேதான் இது போன்ற ஒரு முடிவை எடுத்ததாக சப்னா தெரிவித்துள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியேறும்போது பணம் மற்றும் நகைகளை எடுத்துச் செல்லவில்லை என்றும், மொபைல் போன், 200 ரூபாய் மட்டுமே எடுத்துச்சென்றதாக தெரிவித்துள்ளார். போலீஸார் எங்களை தேடுவதாக அறிந்து நாங்களே வந்து சரணடைந்தோம் என்றும் சப்னா தெரிவித்தார்.

ராகுலை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு,''என்ன நடந்தாலும் ராகுலுடன்தான் வாழ்வேன். ராகுலை திருமணம் செய்து கொள்வேன்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து ராகுல் கூறுகையில், ''சப்னா எனக்கு போன் செய்து அலிகர் பேருந்து நிலையத்தில் சந்திக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். எனவேதான் அவருடன் சென்றேன். முதலில் லக்னோ சென்றோம். அங்கிருந்து முஜாபர்பூர் சென்றோம்'' என்றார்.

சப்னாவை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு, சிறிது அமைதிக்கு பிறகு, `ஆம் திருமணம் செய்வேன்’ என்று தெரிவித்தார். ஆனால் அவர் இரண்டு மனநிலையில் இருப்பது அவரது பேச்சில் தெரிய வந்ததாக தெரிவிக்கிறார்கள் போலீஸார்.

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

அதேசமயம் சப்னாவை இனி எங்களது விட்டிற்குள் அனுமதிக்கமாட்டோம் என்று சப்னாவின் கணவர் ஜிதேந்திர குமார் தெரிவித்தார். ``அவர் எடுத்துச்சென்ற நகை மற்றும் பணத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும். சப்னா வீட்டை விட்டு ஓடிப்போனதால் எங்களது மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனது மகள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எங்கள் மகள் வாழ்க்கையை தொடங்கும் முன்பு அதனை எனது மனைவியே சீரழித்துவிட்டார். சப்னா எடுத்துச்சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்கவில்லையெனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சப்னா எப்போதும் ராகுலுடன் மொபைல் போனில் பேசிக்கொண்டே இருப்பார்” என்று அவர் தெரிவித்தார்.

சப்னாவின் மைத்துனர் தினேஷ் இது குறித்து கூறுகையில், ''ஜிதேந்திரா ஒருபோதும் சப்னாவை அடித்தது கிடையாது. நான் பல மாதங்கள் அவர்களது வீட்டில் தங்கி இருக்கிறேன். அப்போது ஒரு போதும் அது போன்ற ஒரு நிகழ்வை நான் பார்க்கவில்லை'' என்று தெரிவித்தார். கிராமத்தினர் ராகுலை சப்னாதான் கடத்திசென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இப்போது போலீஸார் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த வார கேள்விகள்!

விவாதப்பொருளான உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, அடுத்த இந்திய தலைமை நீதிபதி, தொடங்கிய மீன்பிடித் தடைக்கலாம், ஐ.பி.எல், சூர்யாவின் ரெட்ரோ திரைப்பட டிரெய்லர் ரிலீஸ் எனப் பல நிக... மேலும் பார்க்க

"இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள்" -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?

மும்பையில் அடிக்கடி மராத்தியர் மற்றும் குஜராத்தியர் இடையே சிறு சிறு தகராறு ஏற்படுவதுண்டு. குஜராத்தியர்கள் வசிக்கும் கட்டிடங்களில் மராத்தியர்களுக்கு வீடு விற்பனை செய்வது கிடையாது.அப்படியே இரு தரப்பினரு... மேலும் பார்க்க

மனித விந்தணுக்களுக்கு இடையே நடைபெறும் பந்தயம் - இந்த `Sperm Race’ எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?

உலகில் முதன்முறையாக விந்தணுக்களுக்கு இடையே பந்தயம் நடைபெற உள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான ரேஸில் மனிதர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை, விந்தனுக்கள் தான் ஈடுபடுகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்... மேலும் பார்க்க

”கைதிகளுடன் தனிமையில் இருக்கலாம்...” - சிறையில் திறக்கப்பட்ட ”பாலியல் அறை” - எங்கே தெரியுமா?

இத்தாலியில் சிறை கைதிகளுக்காக முதன்முதலில் "பாலியல் அறை" திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய உம்ப்ரியா பகுதியில் உள்ள சிறையில் திறக்கப்பட்ட இந்த பாலியல் அறையில் ஒரு கைதி தனது பெண் துணைவியுடன் தனிப்ப... மேலும் பார்க்க

`இது என் தாயார் விருப்பம்’ - 60 வயதில் கட்சி பெண் நிர்வாகியை மணந்த பாஜக மூத்த தலைவர்

மேற்கு வங்க மாநில முன்னாள் பா.ஜ.க தலைவராக இருப்பவர் திலிப் கோஷ். மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பா.ஜ.க-வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த பெருமை திலிப் கோஷிற்கு உண்டு. 60 வயதாகும் திலிப் கோஷ் தனது ச... மேலும் பார்க்க