செய்திகள் :

Voter ID: ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி? 15 நாள்களில் வீடு தேடி வந்துவிடும்! | How to?

post image

2026-ல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. 18 வயதை எட்டியவர்கள் புதியதாக இந்தத் தேர்தலில் ஓட்டுப்போட உள்ளார்கள். அதற்கு கட்டாயம் வாக்காளர் அட்டை அவசியம் தானே.

அதை எப்படி ஈசியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்... வாங்க...

1. முதலில், voters.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் வலைதளத்திற்குள் செல்லவும்.

2. உங்களுடைய மொபைல் நம்பர், இ-மெயில் முகவரி (இது ஆப்ஷனல் தான்), கேப்சா ஆகியவற்றை சரியாக பதிவிட்டு கொள்ளவும்.

3. அடுத்ததாக வரும் பக்கத்தில், உங்களுடைய முதல் பெயர், கடைசி பெயர், பாஸ்வோர்டு, 'Confirm Password' கொடுக்கவும்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

(பாஸ்வோர்டில் குறைந்தபட்சம் ஒரு கேப்பிட்டள் லெட்டர், ஒரு ஸ்மால் லெட்டர், ஒரு நம்பர், ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருப்பது நல்லது)

4. 'Request OTP'-ஐ கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவிட்டு கொள்ளவும்.

5. இப்போது நீங்கள் மேலே கொடுத்த தகவல்களை மீண்டும் கொடுத்து, 'Log in' செய்துகொள்ளுங்கள்.

6. 'Fill Form 6' கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் தகவல்களையும், ஆவணங்களையும் சரியாக பதிவிடுங்கள்.

7. அடுத்து, 'Preview' கொடுத்து, நீங்கள் ஃபில் செய்த தகவல்களில் எதாவது தவறு உள்ளதா என்பதை சரிபாருங்கள். எதாவது இருந்தால் உடனடியாக சரி செய்து, 'Submit' கொடுங்கள்.

அப்புறம் என்ன?அடுத்த 15 நாள்களில் உங்களது முகவரியை தேடி உங்களது வாக்காளர் அட்டை வந்துவிடும்.

இந்த 15 நாள்களில், உங்களுடைய வாக்காளர் அட்டை எந்த பிராசஸில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள, அதே கணக்கிற்குள் சென்று, 'Track Application Status' கொடுத்து தெரிந்துகொள்ளலாம்.

விழுப்புரம்: பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி வால்! - மருத்துவர்கள் பரிசோதனை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 52 மாணவ மாணவிகளிடம் மருத்துவர்கள் பரிசோதனை ... மேலும் பார்க்க

'அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதி மகனுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?' - இ.பி.எஸ் காட்டம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22), மதுரையில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்களின் முன்னிலையில்... மேலும் பார்க்க

தஞ்சை: ”சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்”- அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 31 வது வார்டில் உள்ளது செண்பகவள்ளி நகர். இப்பகுதியில் பாதாள சாக்கடை மெயின் குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பணிகள் இன... மேலும் பார்க்க

'இனி எங்களை சீண்டினால், பெரிய விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும்' - அமெரிக்காவை எச்சரிக்கும் காமேனி

கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) நள்ளிரவில், ஈரானின் அணு ஆயுதத் திட்டப் பகுதிகளைத் தாக்கியது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாக பார்க்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் குறித்து ஈரான் உச்சத் தலைவர் காமேனி... மேலும் பார்க்க

'சியோனிச ஆட்சியை வீழ்த்தி... நசுக்கி'- இஸ்ரேல் - ஈரான் தாக்குதலுக்கு பிறகு காமேனியின் முதல் கமென்ட்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து, ஈரான் நாட்டிற்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, 'ஈரானின் உச்சத் தலைவர் காமேனி எங்கே?' இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவரை வெளியிடங்களில் காணவே முடியவ... மேலும் பார்க்க

`இந்திரா காந்தி சுயநலத்துகாகவே அவசர நிலையை அறிவித்தார்!’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய 50-வது ஆண்டை நினைவுகூறும் விதமாக, அரசியலைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை சார... மேலும் பார்க்க