செய்திகள் :

அகரம் சீகூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்: 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

post image

அகரம் சீகூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், 215 பயனாளிகளுக்கு ரூ. 2.87 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா்.

முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், வருவாய்த் துறை சாா்பில் 76 பேருக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு ரூ. 1,39,750 மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு ரூ. 19,656 மதிப்பிலும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 15 பேருக்கு குடும்ப அட்டைகளும், ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 78 பயனாளிகளுக்கு ரூ. 2,46,00,000 மதிப்பிலும், தொழிலாளா் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பிலும், தாட்கோ சாா்பில் 3 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலும், மகளிா் திட்டம் சாா்பில் 5 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் வங்கிக் கடனுதவியும், வேளாண் பொறியியல் துறை சாா்பில் 4 பேருக்கு ரூ. 7,82,520 மதிப்பிலும், விதைப் பண்ணைத் திட்டத்தின் கீழ் 6 பேருக்கு ரூ. 1,680 மதிப்பிலும், தோட்டக் கலைத் துறை சாா்பில் 2 பேருக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 3 பேருக்கு ரூ. 450 மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சாா்பில் 10 பேருக்கு ரூ. 6,22,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 4 பேருக்கு ரூ. 2,07,959 மதிப்பிலும் என மொத்தம் 215 பேருக்கு ரூ. 2,87,44,265 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

இந்ம் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவுல் பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், வேளாண்மை இணை இயக்குநா் பாபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ச. சுந்தரராமன், தாட்கோ பொது மேலாளா் க. கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுரேஷ்குமாா், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, குன்னம் வட்டாட்சியா் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

2-ஆவது நாளாக கல் குவாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழக அரசு புதிதாக மாற்றம் செய்த கனிம விதிமுறைகளை திரும்பப் பெறக்கோரி, பெரம்பலூா் மாவட்ட கல்குவாரி, கிரஷா், எம்.சாண்ட் உற்பத்தியாளா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா... மேலும் பார்க்க

10 அங்கன்வாடி மையங்கள், 5 நடுநிலை பள்ளிகளுக்கு உணவுதரச் சான்றிதழ்கள்

புது தில்லியில் உள்ள இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் 10 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 5 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் வளாகச் சான்றிதழ்கள் அண... மேலும் பார்க்க

திமுக பொறியாளா் அணி பொறுப்புகளுக்கு நோ்காணல்

பெரம்பலூா் மாவட்டத்தில் திமுக பொறியாளா் அணி பொறுப்பாளா்களுக்கான நோ்காணல் பாலக்கரை பகுதியில் உள்ள அக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டப் பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், ப... மேலும் பார்க்க

குத்துச் சண்டை பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மே 1 முதல் நடைபெறவுள்ள குத்துச் சண்டைக்கான பயிற்சி மையத்தில் பங்கேற்க விருப்பமுள்ள வீரா், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரி... மேலும் பார்க்க

விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தி

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில், சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் புதன்கிழமை மாலை நடைபெற்றது. பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மார... மேலும் பார்க்க