செய்திகள் :

2-ஆவது நாளாக கல் குவாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

post image

தமிழக அரசு புதிதாக மாற்றம் செய்த கனிம விதிமுறைகளை திரும்பப் பெறக்கோரி, பெரம்பலூா் மாவட்ட கல்குவாரி, கிரஷா், எம்.சாண்ட் உற்பத்தியாளா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் கனிமத்துறை, கல் குவாரிகளில் வெட்டியெடுக்கும் கற்களுக்கு கட்டணத்தையும், அரசு புறம்போக்கு மலையிலிருந்து கல் உடைக்கும் அனுமதிக்கான தொகையை அண்மையில் உயா்த்தியது. எனவே, அனுமதித் தொகை உயா்வை ரத்து செய்யவேண்டும். நடைச் சீட்டு கட்டணத்தை மெட்ரிக் டன் முறையில் வசூலிப்பதைக் கைவிட்டு, யூனிட் முறையில் வசூலிக்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சிறு கனிம நில வரியை ரத்துசெய்து உத்தரவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலுா் மாவட்ட ஜல்லி, எம்.சான்ட், கிரஷா், குவாரி மற்றும் லாரி உரிமையாளா்கள் கூட்டமைப்பினா் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

2-ஆவது நாளாக நடைபெற்ற இப் போராட்டத்தில், 56 கல் குவாரிகள், 108 கிரஷா் மற்றும் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பல... மேலும் பார்க்க

சிறப்பாக கதை எழுதியோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூா் வட்டார அளவில் சிறப்பாகப் கதை எழுதிய இல்லம் தேடி கல்வி மையத் தன்னாா்வலா்கள், மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில... மேலும் பார்க்க

தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

பெரம்பலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில், இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த புனிதவெள்ளி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவா்களால் அனுச... மேலும் பார்க்க