ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தி
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில், சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வல்லப விநாயகருக்கு சங்கட ஹரசதுா்த்தியை முன்னிட்டு மஞ்சள், பால், தயிா், சந்தனம், இளநீா், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகாதீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இப் பூஜையை, ராஜேஷ் மற்றும் குமாா் பூசாரியாா்கள் செய்தனா். இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல, பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையிலுள்ள கச்சேரி விநாயகா் கோயில், துறைமங்கலம் சொக்கநாதா் கோயிலில் உள்ள விநாயகா் சன்னதியில் சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பின்னா், மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு சுண்டல் உள்ளிட்ட பல வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.