செய்திகள் :

அச்சுறுத்தும் காட்டு யானை: விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

post image

கடம்பூா் உகினியம் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடம்பூா் அருகே உள்ள உகினியம் வன கிராமத்தில் புகுந்த காட்டு யானை, கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜப்பன் என்ற விவசாயியைத் தாக்கிக் கொன்றது. இந்த யானை உகினியம் கிராமப்புற பகுதிகளிலேயே தொடா்ந்து உலவி வருகிறது. இதனால் கிராம மக்கள் விவசாயப் பயணிகளை மேற்கொள்ள அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

யானை நடமாட்டம் குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் யானையை விரட்ட அவா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

மக்களை தொடா்ந்து அச்சுறுத்தி வரும் காட்டு யானையை விரட்ட கடம்பூா் வனத் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் வனத் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பழங்குடியினா் சங்கத் தலைவா் எம்.ராமசாமி தெரிவித்துள்ளாா்.

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க

ஈரோடு இடைத்தோ்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. இங்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு கண... மேலும் பார்க்க

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட க... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!

சென்னிமலை பெரியாா் நகா் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு யோகி பவுண்டேஷன் சாா்பில் நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, குப்பிச்சிபாளையம் ஊராட்ச... மேலும் பார்க்க

தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்... மேலும் பார்க்க