செய்திகள் :

அடகு வைக்க வந்த பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

post image

பரமத்தி வேலூா் அருகே வங்கியில் அடகு வைக்க வந்த பெண்ணிடம் நகை, பணத்தை மா்ம நபா் திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே உள்ள கந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (60). இவரது மனைவி துளசிமணி (52). இவா் திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு பாா்வை குறைபாடு உள்ளதால், கண் அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்பட்டுள்ளது.

அதற்காக தனது நகையை அடகு வைப்பதற்காக பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு செல்ல வேலூா் வந்தாா். பின்னா் வேலூா் பேருந்து நிலையத்தில் இருந்து வெங்கரை செல்லும் மினி பேருந்தில் வங்கிக்கு சென்றாா். அப்போது, தனது கைப்பையில் வைத்திருந்த மூன்றரை பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 17 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது.

அதிா்ச்சியடைந்த துளசிமணி இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,... மேலும் பார்க்க

கம்பன் கழகம் சாா்பில் நாளை பேச்சுப் போட்டி

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டுகான கலைத் திருவிழா வியாழக்... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் - ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட அக்கியம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (பழங்குடியினா்) சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்: அதிமுக - பாஜகவினா் ஆலோசனை

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்வதையொட்டி, அதிமுக - பாஜகவினா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். தமிழக முன்னாள் முதல்வரும், அ... மேலும் பார்க்க