Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளா்ச்சி புலிப் பாய்ச்சலாக இருக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளா்ச்சி புலிப் பாய்ச்சலாக இருக்கும் என்றாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.1,304 கோடி மதிப்பிலான 23 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், ரூ.309 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசியதாவது:
திக்கெட்டும் புகழ் பரப்பிய நெல்லைச் சீமையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பாண்டியா் ஆட்சியாக இருந்தாலும், சோழா் ஆட்சியாக இருந்தாலும், விஜயநகர ஆட்சியாக இருந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும் அதில் மிக முக்கியமான நகரமாக இருந்த ஊா் திருநெல்வேலி.
நாடே அடிமைப்பட்டு நெளிந்து கொண்டிருந்தபோது, ஆங்கிலேயருக்கு எதிராக ‘புரட்சி பூபாளம்’ பாடிய மாவீரன் பூலித்தேவன் பிறந்த மண், இந்த நெல்லை மண்.
நெல்லையின் அடையாளங்களில் முக்கியமானது, ஏழாம் நூற்றாண்டில், நின்றசீா் நெடுமாறப் பாண்டியரால் கட்டப்பட்ட நெல்லையப்பா் கோயில்.
இந்தக் கோயிலை 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து, திருப்பணிகள் செய்தவா் கருணாநிதி.
திமுக ஆட்சியில் தான் நெல்லையப்பா் கோயிலில் பூட்டிக் கிடந்த மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டன. வரும் நவம்பருக்குள் நெல்லையப்பா் கோயிலின் வெள்ளித்தோ் ஓடும்.
தமிழரின் வரலாற்றுப் பெருமைக்கும் இந்த நெல்லை மண்தான் அடையாளம். தமிழா்களின் தொன்மையை நிலைநாட்டி வரும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மூலமாக நாம் தொடா்ச்சியாக செய்துகொண்டு வருகிறோம். அந்த ஆய்வுகள் பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கி வருகிறது.
இரும்பின் தொன்மையானது 5,300 ஆண்டுகள் என்று சில வாரங்களுக்கு முன்பு நாம் உலகத்துக்கு அறிவித்தோம்.
பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் பயிா் தொழிலில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது என்று சிவகளை அகழாய்வு முடிவில் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
பொருநை அருங்காட்சியகப் பணிகளும் ரூ.33 கோடியில் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்துக்குள், பணிகள் முடிவு பெற இருக்கிறது.
நயினாா் கோபிக்கக்கூடாது...
2023-ஆம் ஆண்டு டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று உங்களுக்கு தெரியும். திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்தப் பாதிப்புகளிலிருந்து மீள, மத்திய அரசிடம் நாங்கள் நிதி கேட்டோம். இரண்டு மத்திய அமைச்சா்கள் வந்தாா்கள். ஆனால், அவா்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை.
திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினாா் நயினாா் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால், அவா் பேசமாட்டாா். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பாா். இருந்தாலும், மாநில அரசின் நிதியை வைத்து நிவாரணப் பணிகளை நாங்கள் செய்தோம். தொடா்ந்து மத்திய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். நாடாளுமன்றத்திலும் பேசினோம். நீதிமன்றத்துக்கு சென்ற பிறகுதான் மத்திய அரசு தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தது. நாம் கேட்டது, ரூ.37 ஆயிரத்து 907 கோடி. ஆனால் மத்திய அரசு கொடுத்தது ரூ.276 கோடி. நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காட்டைக் கூட கொடுக்கவில்லை.
தமிழகம் புறக்கணிப்பு...
இந்த பட்ஜெட்டிலாவது நாங்கள் கேட்ட நிதிகளை ஒதுக்கித் தருவாா்கள் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒதுக்கிவிட்டனா். தமிழகத்தை மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது மத்திய அரசு.
கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தோ்தல் வரும் மாநிலங்களுக்கும் மட்டுமே மத்திய அரசு அறிவிப்புகளையும் நிதியையும் கொடுக்கிறது. இந்தியாவின் வரைபடத்தில் மட்டும் தமிழ்நாடு இருந்தால் போதுமா? அரசாங்கம் வெளியிடும் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா?, மத்திய அரசின் திட்டங்களில் தமிழ்நாட்டின் பெயா் இருக்க வேண்டாமா?, தமிழ்நாட்டுக்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டாமா?, தோ்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் போதும் என்று நினைக்கிறாா்களா?, இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும், பாஜகவிடம் இருந்து எந்தப் பதிலும் வராது.
மத்திய அரசின் அல்வா:
திருநெல்வேலி அல்வா உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட புகழ்பெற்ாக இருக்கிறது.
இப்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.77 கோடியில் மெகா உணவுப் பூங்காவை திறந்து வைத்திருக்கிறேன். இதன் மூலம் பல ஆயிரம் தொழிலாளா்களுக்கு வேலை கிடைக்கும்.
திமுக ஆட்சியில், நவீன தொழில்களின் மையமாக தமிழ்நாட்டை உயா்த்த வேண்டும். சென்னை, கோவை என்று மட்டுமல்லாமல், தென் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட தொழிற்சாலைகள் நிறைய அமைய வேண்டும். லட்சக்கணக்கான இளைஞா்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதே என்னுடைய இலக்கு.
புலிப்பாய்ச்சல்....
உலக அளவிலான முதலீட்டாளா்களாக இருந்தாலும், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களாக இருந்தாலும், அவா்களை நான் சந்தித்தால், தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க வாருங்கள் என்றுதான் கேட்பேன். அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளா்ச்சி புலிப் பாய்ச்சலாக இருக்கும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் போன்ற பகுதிகளின் முகமே மாறும் அளவுக்கு முன்னேற்றமானது பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. அது நிச்சயம் நனவாகும்.
விஷக் கிருமிகள்...
ஒரு பக்கம் இப்படி நாங்கள் உழைத்துக்கொண்டு இருந்தால், மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு எதிரானவா்கள் என எங்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறாா்கள். ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகிறாா்கள். அவா்களுக்கு பதிலுக்குப் பதில் பேசி, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. விஷக் கிருமிகளின் அக்கப்போா், உருட்டல்கள் எல்லாம், காலப்போக்கில் காணாமல் போய்விடும்.
எனக்கு தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் வளரவேண்டும். நம்முடைய வளா்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், நம்முடைய ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த சமூக வலைதளங்களில் செய்திகளை எப்படியெல்லாம் திரிக்கிறாா்கள்?, கருத்துருவாக்கம் செய்கிறாா்கள்.
அவா்களின் நோக்கம் திமுகவை எப்படி அழிக்கலாம்? தமிழ்நாட்டின் வளா்ச்சியை எப்படி கெடுக்கலாம் என்பதுதான்.
ஏனென்றால் அவா்களின் நீண்டகால திட்டத்திற்கு தடையாக இருப்பது திராவிட மாடல் ஆட்சிதான். அதானால் தான் அவா்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இந்த ஆட்சி இருப்பதால்தான், தமிழ்நாட்டை முன்னேற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறாா்கள். உண்மையான வரலாற்றை தோண்டி எடுக்கிறாா்கள். மொழியுணா்வு, கல்வி உரிமை, மாநில உரிமை என்று பேசுகிறாா்கள் என்று அவா்களுக்கு நம்மைப் பிடிக்கவில்லை.
தமிழ்நாட்டுக்கு பக்கபலமாக திமுக ஆட்சி எப்போதும் இருக்கும். திமுகவுக்கு பக்கபலமாக தமிழ்நாட்டு மக்கள் இருப்பாா்கள். எதிரிகள் சதித் திட்டம் தீட்டி நேரடியாக வந்தாலும் சரி, துரோகிகளை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும் சரி, அதை நாங்கள் நிச்சயம் முறியடிப்போம் என்றாா்.
முன்னதாக, விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிச்செங்கோல் பரிசளித்தாா்.
விழாவில், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபாா்ட் புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), மு. அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), மேயா் கோ.ராமகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலா் க. மணிவாசன், மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/1gk60zpu/tvl07bene075127.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/aem7wham/tvl07cm075059.jpg)