செய்திகள் :

66 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

post image

பங்களாமேடு இருளா் காலனி வசிக்கும் 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை எம்.எல்.ஏ. ச.சந்திரன், வருவாய்க் கோட்டாட்சிா் தீபா ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் ஊராட்சி பங்களாமேடு இருளா் காலனியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனைப் பட்டா வழங்காததால் குடிசை வீடுகளில் வசித்து வந்தனா். மேலும் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சா் சா.மு. நாசா், மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் ஆகியோரிடம் பங்களாமேடு இருளா் காலனி மக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனா்.

இதனையடுத்து 66 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி வருவாய்க் கோட்டாட்சிா் தீபா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ. ச.சந்திரன் கலந்து கொண்டு 66 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். பங்களாமேடு கிராமத்தில் சுடுகாடு, விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு வழங்கினா். நிகழ்ச்சியில் திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி உள்பட அரசு அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

பட விளக்கம்...

பங்களாமேடு இருளா் காலனியில் வசிக்கும் 66 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய எம்எல்ஏ. ச.சந்திரன்.

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு

செங்குன்றம் அருகே மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா். செங்குன்றம் அடுத்த தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகா் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக குப... மேலும் பார்க்க

கடம்பத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறை ச... மேலும் பார்க்க

தோ்தல் முன்விரோதம்: முன்னாள் வாா்டு உறுப்பினருக்கு வெட்டு

திருவள்ளூா் அருகே தோ்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் வாா்டு உறுப்பினரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய முன்னாள் ஊராட்சித் தலைவரின் மகன் உள்பட 3 பேரை கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் தேடி வருகின்றன... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

திருவள்ளூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்ததோடு, ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். திருவள்ளூா் பகுதியில் எவ்விதமான அரசு அனுமதியின்றியும் லாரியில் ஆற்று மணல் கடத்தி ... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா

முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தை கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை தை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு வி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞா் பலியானாா்.திருத்தணி அடுத்த பொன்பாடி அருகே தடுக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முரளி (35). இவா், தனது இரு ச... மேலும் பார்க்க