செய்திகள் :

தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!

post image

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

மொத்தம் 5,000 பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் தெரிவித்தாா்.

மேலும், ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 5 விவிபேட் கருவிகள் (வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி) ஆய்வுக்குட்படுத்தப்படுவதாக அவா் தெரிவித்தாா்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

30 நிமிடங்களுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு தோ்தல்களில் எந்த வெற்றியும் பெறாத நிலையில், காங்கிரஸ் சில தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் களம் கண்டுள்ளது.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆதிக்கம் அப்படியே இருக்கிறதா அல்லது 1998-க்குப் பிறகு முதல் முறையாக தில்லியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பின்னர் தெரியவரும்.

அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அண்மையில், தனது பெண் தோழி பௌலா ஹர்ட் குறித்து பேசியிருக்கிறார். தற்போது 69 வயதாகும் பில் கேட்ஸ், கடந்த 2021ஆம் ஆண்டு மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸை விவகாரத்து செய்திர... மேலும் பார்க்க

கேஜரிவால், மணீஷ் சிசோடியா முன்னிலை; அதிஷி தொடர்ந்து பின்னடைவு!

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், மணீஷ் சிசோடியா முன்னிலையில் உள்ளனர். முதல்வர் அதிஷி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். 70 தொகுதிகள... மேலும் பார்க்க

தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது: பிரியங்கா பதில்

கேரள மாநிலம் கன்னூர் வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது என்று பதிலளித்துள்ளார்.தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப... மேலும் பார்க்க

ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட முன்னிலையில் இல்லை. 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல் நிலவரம்: 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பாஜக

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாக வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கு... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்குர்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய முன்னாள் அமைச்சா் அனுராக் சிங் தாக்குர் புனித நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வத... மேலும் பார்க்க