செய்திகள் :

மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்குர்!

post image

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய முன்னாள் அமைச்சா் அனுராக் சிங் தாக்குர் புனித நீராடினார்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். மகா கும்பமேளா பிப்ரவரி 26 அன்று முடிவடைகிறது.

மகர சங்கராந்தி, மௌனி அமாவாசை, பசந்த் பஞ்சமி ஆகிய மூன்று புனித அமிர்த ஸ்நான விழாக்கள் முடிவடைந்த நிலையிலும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் புனித நீராடுவதற்காகத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்.

மௌனி அமாவாசையன்று மட்டும் சுமார் 8 கோடி பக்தர்கள் புனித நீராடினர், மகர சங்கராந்தி அன்று சுமார் 3.5 கோடி பக்தர்களும், வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பக்தர்களும், ஜனவரி 30, பிப் 1 ஆகிய தேதிகளில் தலா 2 கோடிக்கும் அதிகமான பக்தர்களும், பௌஷ் பூர்ணிமா அன்று 1.7 கோடி பக்தர்களும் நீராடினர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர்.

ஹேமா மாலினி, அனுபம் கெர் போன்ற நடிகர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!

தொடர்ந்து பாஜக தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான அனுராக் சிங் தாக்குர் இன்று மகா கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் நீராடினார்.

"மகா கும்பமேளாவில் புனித நீராடி, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய தெய்வீக ஆறுகள் சங்கமம் ஆகும் கரையில் அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். கங்கை, யமுனை, சரஸ்வதியின் ஆசீர்வாதங்கள், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தைக் கொண்டுவரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் முன்னிலை!

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 12.30 நிலவரப்படி, பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பிஜ்வாசன் தொக... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணமா?

புது தில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் பார்க்க

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் மலர்க் கண்காட்சி!

கோவை : கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர் கண்காட்சித் தொடங்கியது.இந்த மலர்க் கண்காட்சியை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி: எல். முருகன்

தில்லி தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) தோ்தல் நடைபெற்ற ந... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால்.. கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொச்சி: பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், வழக்கை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக முன்னிலை: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், காலை 11.50 மணி நிலவரப்படி, பாஜக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருவதால் தில்லி தலைமை... மேலும் பார்க்க