அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் கடந்த பிப். 5 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 30,798 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிக்க | தில்லி தேர்தல்: ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 6,014 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். நோட்டாவுக்கு 1,204 வாக்குகள் கிடைத்துள்ளன.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதையொட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் அவர்கள் திமுகவின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | கேஜரிவால், அதிஷி தொடர்ந்து பின்னடைவு! மணீஷ் சிசோடியா முன்னிலை!