செய்திகள் :

ராணிப்பேட்டை: மக்களை அச்சுறுத்தி தொடர் வழிப்பறி - 2 திருடர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை

post image
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (37). மகாவீர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). இருவரும் சேர்ந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி வந்தனர்.

கடந்த 28-8-2020 அன்று ஆற்காடு தாலுகாவுக்கு உட்பட்ட மேல்விஷாரம் பகுதியிலும், 31-8-2020 அன்று ஆற்காடு கல்லூரியின் சந்திப்புப் பகுதியிலும் அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக, ஆற்காடு நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழிப்பறி கொள்ளையர்களான ஜெயக்குமார், அருண்குமார் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

வழிப்பறி திருடர்கள்

இந்த வழக்குகளின் விசாரணை ஆற்காடு உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி-7) ``இரண்டு வழக்குகளிலும் தனித்தனியாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இரண்டாயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதையடுத்து, வழிப்பறி திருடர்கள் ஜெயக்குமார், அருண்குமார் 2 பேரும் சிறையிலடைக்கப்பட்டனர்.

2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை - அரக்கோணம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள ஒருக் கிராமத்தில் கடந்த 30-12-2021 அன்று இரு இளைஞர்கள் சிறுமி ஒருவரைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.இந்த கொடூரம் தொடர்பாக, அரக்கோணம் அனை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: சிறுமியின் தாய், விசிக மா.செ குற்றவாளிகள் - குற்றப்பத்திரிகை விவரங்கள்

கலவர வழக்குகள்ளக்குறிச்சி, கனியாமூர்கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `தனியார் பள்ளி கலவர வழக்கில் மாணவின் தாய் குற்றவாளி’ - குற்றப்பத்திரிகை தாக்கல்

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால... மேலும் பார்க்க

ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக்கூறி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கூரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராமசாமி- காசியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு குழந்தைகள்... மேலும் பார்க்க

`எனக்கு லீவு வேணும்..' -தர மறுத்ததால் சக ஊழியர்களைக் கத்தியால் குத்திய அரசு ஊழியர்

மேற்கு வங்கம் மாநிலத்தில், விடுப்பு அளிக்க மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை அரசு ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ... மேலும் பார்க்க

'அடுத்து எனக்கு தான் ஸ்கெட்ச்' - வீடியோ காலில் கோவை சிறை கைதி பகீர் வாக்குமூலம்

கோவை மத்திய சிறையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற கைதி கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறை வளாகத்தில் மர்மமான முறைய... மேலும் பார்க்க