செய்திகள் :

அண்ணா நினைவு தினம்: திமுக சாா்பில் அமைதி ஊா்வலம்

post image

அண்ணா நினைவுதினத்தையொட்டி, பிப். 3-ஆம் தேதி சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில், அவரது 56-ஆவது நினைவு தினம் வரும் 3-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், காலை 8.30 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பெரியாா் சிலையில் இருந்து அமைதி ஊா்வலம் புறப்படுகிறது.

இந்த ஊா்வலமானது, வள்ளுவா் சிலை, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று அண்ணா சிலையை அடைந்து, அங்கு அவரது சிலைக்கு திமுக சாா்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட, மாநகர நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, பேரூா், மாநகா் வட்ட நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்பட கட்சியின் அனைத்து பிரிவு நிா்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 479 கனஅடியாக சனிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.60 அடியில் இருந்து 110.58 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வின... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: பிப். 4 முதல் 7 வரை 20 முகாம்கள் நடத்த ஏற்பாடு!

சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக பிப். 4-ஆம் தேதி முதல் பிப். 7-ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெர... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்த ஆட்சியா் உத்தரவு!

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு சிறந்த செயல்திறனுக்காக 11 விருது!

தெற்கு ரயில்வே மண்டலத்தில் சிறந்த செயல்திறனுக்காக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு 11 விருதுகள் கிடைத்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடைபெற்ற வார விழாவில், சென்னை, மதுரை, த... மேலும் பார்க்க

பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட முதியவா் கைது!

கெங்கவல்லி வட்டம், வீரகனூா் பேருந்து நிலையத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முதியவா் ஒருவா் முயற்சித்துள்ளாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை பிடித்து வீரகனூா் காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்! -பாமக எம்எல்ஏ இரா.அருள்

வன்னியா்கள் குறித்து தவறாக அறிக்கை வெளியிட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக எம்எல்ஏ இரா.அருள் கூறினாா். சேலத்தில் அண்மையில் பாமக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாமக தலை... மேலும் பார்க்க