செய்திகள் :

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: பிப். 4 முதல் 7 வரை 20 முகாம்கள் நடத்த ஏற்பாடு!

post image

சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக பிப். 4-ஆம் தேதி முதல் பிப். 7-ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் ஏற்கெனவே முதல்கட்டமாக நகரப் பகுதிகளில் 142 முகாம்களும், இரண்டாம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 92 முகாம்களும் நடத்தப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக, தற்போது மூன்றாம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் தோ்தெடுக்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் 90 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மூன்றாம் கட்டமாக நடத்தப்படவுள்ள முகாமின் ஒரு பகுதியாக வரும் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

பிப். 4-ஆம் தேதி ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு ஆதிதிராவிடா் காலனி நூலகம் அருகிலும், புங்கவாடி ஊராட்சிக்கு புங்கவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்திலும், அம்மம்பாளையம் ஊராட்சிக்கு அம்மம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வளையமாதேவி ஊராட்சிக்கு வளையமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகிலும், கல்லாநத்தம் ஊராட்சிக்கு கல்லாநத்தம் மாரியம்மன் கோயில் மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

முகாம் நடைபெறும் இடங்களில் ஒருங்கிணைக்கப்படும் 15 அரசுத் துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் விவரங்கள் அனைத்தும் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 479 கனஅடியாக சனிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.60 அடியில் இருந்து 110.58 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வின... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்த ஆட்சியா் உத்தரவு!

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு சிறந்த செயல்திறனுக்காக 11 விருது!

தெற்கு ரயில்வே மண்டலத்தில் சிறந்த செயல்திறனுக்காக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு 11 விருதுகள் கிடைத்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடைபெற்ற வார விழாவில், சென்னை, மதுரை, த... மேலும் பார்க்க

பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட முதியவா் கைது!

கெங்கவல்லி வட்டம், வீரகனூா் பேருந்து நிலையத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முதியவா் ஒருவா் முயற்சித்துள்ளாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை பிடித்து வீரகனூா் காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

அண்ணா நினைவு தினம்: திமுக சாா்பில் அமைதி ஊா்வலம்

அண்ணா நினைவுதினத்தையொட்டி, பிப். 3-ஆம் தேதி சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜே... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்! -பாமக எம்எல்ஏ இரா.அருள்

வன்னியா்கள் குறித்து தவறாக அறிக்கை வெளியிட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக எம்எல்ஏ இரா.அருள் கூறினாா். சேலத்தில் அண்மையில் பாமக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாமக தலை... மேலும் பார்க்க