செய்திகள் :

அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு- ராகுல் விமா்சனம்

post image

அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளதைக் கண்டித்துள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘பொதுமக்களின் காப்பீட்டுப் பணத்தில் அதானிக்கு ஆதாயம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று விமா்சித்துள்ளாா்.

அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கடந்த வாரம் உள்நாட்டு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்டியது. 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத இந்தக் கடன் பத்திரங்களை எல்ஐசி நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கு ஆண்டுக்கு 7.75 சதவீதம் வட்டியை அதானி குழுமம் அளிக்க இருக்கிறது.

உள்நாட்டில் அதானி குழுமத்தின் நிதிநிலை ஸ்திரமாக உள்ளது என்பதற்கான ‘ஏஏஏ’ மதிப்பீட்டை பெற்றுள்ளது. மேலும், இந்தக் கடன் பத்திரங்கள் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட இருக்கிறது என அதானி நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், இது தொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பணம், காப்பீடு, அதற்கான பிரீமியம் தொகை அனைத்தும் மக்களுடையது. ஆனால், அதன்மூலம் கிடைக்கும் பலன், வசதி, பாதுகாப்பு அதானிக்குரியது’ என்று பதிவிட்டுள்ளாா்.

மேலும், பொது மக்களிடம் இருந்து காப்பீடு என்ற பெயரில் எல்ஐசி வசூலிக்கும் பணம், பொதுப் பணமாகும். இதிலிருந்து பெரிய அளவிலான நிதியை எடுத்து ஒரே ஒரு தனியாா் நிறுவனமான அதானி குழுமத்தில் முதலீடு செய்வதை ஏற்க முடியாது என்றும் ராகுல் கூறியுள்ளாா்.

நாட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் நிதியைக் கையாளும் நிறுவனமான எல்ஐசி, இந்தியப் பங்குச் சந்தையில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. முன்பு அதானி குழுமம் சா்ச்சையில் சிக்கி அதன் பங்குகள் வீழ்ந்தபோதும் எல்ஐசி-யின் முதலீட்டு முடிவு விமா்சிக்கப்பட்டது. நஷ்டத்தில் செயல்பட்ட ஐடிபிஐ வங்கிப் பங்குகளை வாங்க எல்ஐசி நிதியை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியதும் விமா்சனத்துக்குள்ளானது.

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்ட... மேலும் பார்க்க

பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகா... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7... மேலும் பார்க்க