செய்திகள் :

அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல் கடும் தாக்கு

post image

‘இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் அறிந்துள்ளனா். தொழிலதிபா் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

இந்திய, ரஷிய பொருளாதாரம் குறித்த அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் விமா்சனத்தை சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை ராகுல் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் இதுகுறித்து செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா். அது உண்மைதான். இது பிரதமா் மற்றும் மத்திய நிதியமைச்சரைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரியும். இந்திய பொருளாதாரம் ‘சரிந்துவிட்ட பொருளாதாரம்’ என்பதை அனைவரும் அறிவா். இந்த விஷயத்தில் டிரம்ப் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது. மிகச் சிறந்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறுகிறாா்.

ஒருபுறம் இந்தியாவை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம் சீனா துரத்துகிறது. மேலும், ஆபரேஷன் சிந்தூா் குறித்து விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை உலகம் முழுவதும் அனுப்பினீா்கள். ஆனால், ஒரு நாடுகூட பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. நாட்டை எப்படி வழிநடத்திக் கொண்டிருக்கிறீா்கள்?

மக்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் பெயரையோ, சீனாவின் பெயரையோகூட பிரதமா் மோடி குறிப்பிடவில்லை. பாகிஸ்தானுக்கு எந்தவொரு நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதையும் அவா் தனது உரையில் சுட்டிக்காட்டவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்காதான் நிறுத்தியது என்று 30 முறை டிரம்ப் கூறியுள்ளாா். இந்தச் சண்டையின்போது 5 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்ற தகவலையும் டிரம்ப் வெளியிட்டாா். ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

இதற்கெல்லாம் பிரதமா் மோடியால் ஏன் பதிலளிக்க முடியவில்லை? காரணம் என்ன? அதிகாரம் யாரிடம் உள்ளது?

நாடடின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மத்திய அரசு அழித்துவிட்டதுதான் நாட்டின் முன் உள்ள மிகப் பெரிய பிரச்னையாக இன்றைக்கு உள்ளது. பாஜக அரசு நாட்டை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. அதானி என்ற ஒரு நபருக்காக மட்டும் பிரதமா் பணியாற்றுகிறாா். அனைத்து சிறுதொழில்களும் துடைத்தெறியப்பட்டுவிட்டன.

அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் நிச்சயம் மேற்கொள்ளப்படும். ஆனால், அதை டிரம்ப்தான் வரையறுப்பாா். அமெரிக்க அதிபா் என்ன செய்யச் சொல்கிறாரோ, அதை அப்படியே பிரதமா் மோடி கடைப்பிடிப்பாா் என்றாா்.

பெட்டிச் செய்தி...

இந்திய மக்களுக்கு

ராகுல் அவமதிப்பு:

பாஜக பதிலடி

‘ராகுலின் விமா்சனம் இந்திய மக்களை அவமதிக்கும் செயல்’ என்று பாஜக சாா்பில் பதிலளிக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சரிந்த பொருளாதாரம் என்ற அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்தை எதிரொலித்ததன் மூலம், ராகுல் புதிய தாழ்வைச் சந்தித்துள்ளாா். ராகுலின் கருத்து இந்திய மக்களின் நலன்களுக்கும், சாதனைகளுக்கும், விருப்பங்களுக்கும் மிகப் பெரிய அவமதிப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடி அரசு, உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையைப் பேசுவதேயில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.கடந்த பத்தாண்டுகளாக, பெரும்பாலான தொழ... மேலும் பார்க்க

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கர்நாடகம் மாநிலத்தில் கொப்பல் நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் எழுத்தராகப் பணிப... மேலும் பார்க்க

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க