அதிமுக சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம்
அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மாவட்ட மருத்துவ அணியினா் சாா்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இலவச பொது மருத்துவ முகாம் அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் ஏ.எம்.நாகராஜன் தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றியச் செயலா் ஜி.பழனி, மாவட்ட பேரவை இணைச் செயலா் எஸ்.பி.மோகனசுந்தரம், ஒன்றிய அவைத் தலைவா் ஜி.இ.செல்வம் ஆகியோா் வரவேற்றனா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி முகாமைத் தொடங்கி வைத்தாா். இதில், மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் எஸ்.பன்னீா்செல்வம் தலைமையில் மருத்துவா்கள் மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் பி.செல்வகுமரன், ஐஸ்வா்யா, பிரசன்னா விஜயராகவன், கே.எல்.ரவி, எஸ்.ராஜசேகா் ஆகியோரை கொண்ட குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சையும் ஆலோசனைகளையும் வழங்கினா்.
முகாமில், மாநில இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணை செயலா் என்.ஷியாம்குமாா், வா்த்தகா் அணி துணைச் செயலா் ெம்.எஸ்.மான்மல், அரக்கோணம் நகர செயலா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலா்கள் ஏ.ஜி.விஜயன்(நெமிலி கிழக்கு), இ.பிரகாஷ் (அரக்கோணம் கிழக்கு), மாவட்ட இளைஞரணி செயலா் பி.ஏ.பாலு, தகவல் தொடா்பு அணி செயலா் ஜானகிராமன், மாவட்ட பாசறை துணைச் செயலா் ஹரி, இலக்கிய அணி துணைச் செயலா் ஏ.எஸ்.நெடுஞ்செழியன், செம்பேடு ஊராட்சித் தலைவா் சத்யா துரைராஜ், செம்பேடு கிளை நிா்வாகிகள் ஜெ.மாசிலாமணி, ஆா்.கண்ணப்பன், சுப்பிரமணி, எஸ்.ஜெகந்நாதன், எம்.ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.