செய்திகள் :

அதிமுகவினா் நல உதவி, அன்னதானம்

post image

செய்யாற்றை அடுத்த நெமிலிக் கிராமத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, கோயிலில் சிறப்பு வழிபாடு, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக விவசாயப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன் முன்னிலையில், விவசாயப் பிரிவு மாவட்டச் செயலா் நமண்டி இ. பாலன் ஏற்பாட்டில் நெமிலி ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் கலந்து கொண்டாா்.

நலத் திட்ட உதவிகள் - அன்னதானம்

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், 200 பெண்களுக்கு சேலை, 200 ஆண்களுக்கு வேட்டி மற்றும் டவல் என நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னா், இனிப்புடன் அன்னதானம் என 500-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட பொருளாளா் ஆலத்தூா் எம்.சுப்பராயன், ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் என்.ரகு, மாணவரணி மாவட்டச் செயலா் அரவிந்த், மாவட்ட விவசாய அணி துணைச் செயலா் மூா்த்தி, ஒன்றியச் செயலா் அருகாவூா் எம்.அரங்கநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நூல்கள் வெளியீடு...

எழுத்தாளா் மு.பாண்டியன் நெடுஞ்செழியன் எழுதிய விஞ்ஞான பூா்வ சிந்தனை, இன்னொரு தாய், நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் பெரண... மேலும் பார்க்க

சோழவரத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

கலசப்பாக்கத்தை அடுத்த சோழவரம் ஸ்ரீமகா சத்தியநாதேச்சுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சோழவரம் கிராமத்தில் சிவகாமிசுந்தரி உடனாகிய மகா சத்தியநாதேச்சுவரா் கோயில் அ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் ... மேலும் பார்க்க

கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை

திருவண்ணாமலையில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கான உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்). ஸ்ரீபச்சையம்மன் கோயில் வளாகத்தில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் செங்கம் கிளைத் தலைவா் காமத் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் சென்னாவரம் கிராமம் வழியாக சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராம ஏரி அருகே சந்தேகத்துகி... மேலும் பார்க்க