செய்திகள் :

Thug Life: `மூன்று நாளாக குளிக்கவே இல்லை. காரணம் கமல்சார்’ - கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்

post image

'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில், ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கலந்துகொண்டு பேசினார்.

‘தக் லைஃப்’ படத்தில்...

நான் ஒரு தீவிர ரசிகன்

அப்போது, ``இந்தப் படம் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஒரு ரசிகர் தருணம். கமலின் படங்களின் முதல் நாள் முதல் காட்சிகளைப் பார்ப்பவர்களில் நானும் ஒருவன். அவரது ஸ்டைல், கண்கள் என அவர் தொடர்பான அனைத்தும் எனக்குப் பிடிக்கும். நான் ஒரு தீவிர ரசிகன். கமல்ஹாசனுக்கு நான் எவ்வளவு பெரிய ரசிகர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தை கூறுகிறேன். நான் பலருடன் இதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அவ்வளவுப் பெரிய ரசிகன் நான்

ஒரு நாள், கமல் என் வீட்டிற்கு வந்து என் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் ஒதுங்கி நின்று அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் அவர் என் தந்தையிடம், `நான் யார்' என விசாரித்தார். என் தந்தை என்னை அறிமுகப்படுத்தினார். அவர் என் கைகளை குலுக்கினார். கட்டிப்பிடிக்கட்டுமா என அவரிடம் கேட்டேன். அவர் என்னைக் கட்டிப்பித்தார். அதன்பிறகு மூன்று நாள்கள் நான் குளிக்கவில்லை. அதற்கு காரணம் கமல்சார்தான்.

சிவராஜ் குமார்- கமல்ஹாசன்
சிவராஜ் குமார்- கமல்ஹாசன்

அவருடைய வாசனையும் மணமும் என் மீது இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவ்வளவுப் பெரிய ரசிகன் நான். நாம் இருக்கும் வரை, இந்த உறவு ஒருபோதும் அழியாது.

கடந்த டிசம்பரில், எனக்கு அமெரிக்காவில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கமல் சார் சிகாகோவில் இருந்தார். அவர் அப்போது என்னை அழைத்துப் பேசினார். அவர் கண்ணீர் மல்க என்னிடம் பேசியதாக சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அந்த உணர்வு என் தந்தையைப் போல எனக்கு இருந்தது. நன்றி கமல்சார்" என்றார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ``சிவண்ணாவுக்கு நன்றி. நான் அவருடைய சித்தப்பா போன்றவன், ஆனால் அவரது பெயரே சிவண்ணா என்பதால், நான் என் சகோதரர் என்று அழைக்கிறேன். அவர் கன்னட சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார், ஆனால், கன்னட பிரதிநிதியாக, ரசிகராக இங்கு வந்துள்ளார். இத்தனை வருடங்களாக என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்றார்.

Thug Life: "அஞ்சு வண்ணப் பூவே என் ஸ்டைல்ல பாடினேன்; ஆனா, ரஹ்மான் சார்" - பாடகி சாருலதா மணி பேட்டி

‘அஞ்சு வண்ண பூவே...’ இதயம் துளைக்கும் தாலாட்டுப் பாடல் மூலம், ட்ரெண்ட் ஆகி மீண்டும் நெஞ்சம் நெகிழ வைத்திருக்கிறார் பாடகி சாருலதா மணி.'காக்க காக்க', ‘என் உச்சி மண்டைல’, 'சில்லாக்ஸ் சில்லாக்ஸ்', எனத் து... மேலும் பார்க்க

Mani Ratnam: அடுத்தது ரஜினிகாந்த் படமா? - மணி ரத்னம் சொன்ன `நச்' பதில்!

கமல்ஹாசன் - மணிரத்னம் இணைந்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் புரோமோஷன்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன. 38 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரண்டு நாயகர்கள் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்துக்கு... மேலும் பார்க்க

Nani: எளிமையான, மனதை வருடும் படங்களே இன்றைய தேவை - ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டிய நானி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

`சினிமா டு நாவல்' - மணிரத்னத்தின் `கடல்' படத்தின் கதையை நாவலாக எழுதி முடித்த ஜெயமோகன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், அர்ஜுன், அரவிந்த் சுவாமி, துளசி நாயர் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர். ரகுமான் நடிப்பில் 2013-ல் வெளியான திரைப்படம் கடல்.இப்படத்தின் கதை மற்றும் வசனங்களை எழு... மேலும் பார்க்க