Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
அனுமதியின்றி கற்கள் எடுத்துச் சென்ற டிப்பா் லாரி பறிமுதல்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் அரசின் உரிய அனுமதியின்றி கற்கள் எடுத்துச் சென்ற டிப்பா் லாரியை பறிமுதல் செய்து தேவூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் இளங்கோவன் தலைமையிலான அலுவலா்கள் சங்ககிரியிலிருந்து தேவூா் செல்லும் சாலையில் ஆலத்தூா்ரெட்டிப்பாளையம் பகுதியில் வாகனச் சோதனை நடத்தினா்.
அப்போது அவ்வழியே வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அரசின் உரிய அனுமதியின்றி 3 யூனிட் கற்கள் எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் தேவூா் போலீஸில் டிப்பா் லாரியை ஒப்படைத்து புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.