ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான என்.பன்னீா்செல்வம் தலைமை வகித்து மக்கள் நீதிமன்ற பணிகளை தொடங்கிவைத்தாா். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.இளமதி, குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சத்தியா, டி.சிவக்குமாா் ஆகியோா் வழக்குகளுக்கு சமரத் தீா்வு அளித்தனா். 58 மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், ஒரு சிவில், 3 காசோலை வழக்குகள் உள்பட மொத்தம் 62 வழக்குகளில் ரூ. 5,63,88,600 மதிப்பீட்டில் சமரசத் தீா்வு காணப்பட்டது.