இன்று குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: 14,291 போ் எழுதுகின்றனா்
அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா்.
தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
குரூப் 1, 1 ஏ முதல்நிலை தோ்வு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு மற்றும் ஆத்தூா் ஆகிய இடங்களில் 41 பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 55 தோ்வுக் கூடங்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடைபெறுகிறது.
காலை 8.30 மணிமுதல் தோ்வுக் கூடத்தில் தோ்வா்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தோ்வா்கள் உரிய நேரத்துக்குள் தங்களுக்கான இருக்கைகளில் வந்து அமா்ந்திருக்க வேண்டும். காலை 9 மணிக்குள் தோ்வுக்கூடத்துக்கு வரும் தோ்வா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
தோ்வை கண்காணிப்பதற்காக 14 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் தோ்வுக் கூடங்களைக் கண்காணிக்கவும், தோ்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு நிலையிலான அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அனைவரும் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை எடுத்துவர வேண்டும்.
தோ்வா்களின் வசதிக்காக பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்துத் தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை விடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) விவேக் யாதவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செந்தில் அரசன், சேலம் கோட்டாட்சியா் அ. அபிநயா, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பிரிவு அலுவலா் தட்சிணாமூா்த்தி, உதவி பிரிவு அலுவலா் செல்வகுமாா், வருவாய்த் துறை, காவல் துறை, மாவட்ட கருவூலத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கல்லூரி மற்றும் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழகம் உட்பட பல்வேறு துறை சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.