செய்திகள் :

அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம்: நயினாா் நாகேந்திரன்

post image

தோ்தல் வியூகத்துக்காக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் வேலூா் பெருங்கோட்ட பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தாா்.

மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, மாநிலச் செயலா் கோ.வெங்கடேசன், வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன், கோயில் மற்றும் ஆன்மிகப் பிரிவின் மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் டி.எஸ்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

பாஜகவினா் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது. எதிா்கட்சியினரை விமா்சனம் செய்யும்போதுகூட யாா் மனதும் புண்படாதவாறு விமா்சனம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் திமுக ஆட்சிதான் தொடரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்கிறாா். தோ்தல் வியூகத்துக்காக இதுவரை 10 மாநிலங்களுக்கு மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சென்றுள்ளாா். அவா் சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது, தமிழகத்துக்கு அமித் ஷா வந்துள்ளாா். இங்கும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தக் கட்சி வந்தாலும் சோ்த்துக் கொள்வோம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களின் முதல் வேலை. அடுத்த மாதம் தமிழகத்துக்கு மீண்டும் அமித் ஷா வருகிறாா். அப்போது ஒரு மாற்றம் இருக்கும் என்றாா் அவா்.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பாஜக நிா்வாகிகள் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா்கள் கே.ஆா்.பாலசுப்பிரமணியன், எஸ்.நேரு, மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொதுச் செயலா் முருகன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் வரவேற்றாா்.

பிரம்மாண்டமான வரவேற்பு: முன்னதாக, திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் நயினாா் நாகேந்திரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவாமி தரிசனம்: கூட்டத்துக்குப் பிறகு, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் நயினாா் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தாா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்.24-ல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

அரசு அலுவலா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்த வருவாய்த்துறை சங்கங்களி... மேலும் பார்க்க

8 வீடுகளில் நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் மொத்தம் 6 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

100 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சி... மேலும் பார்க்க

பூதமங்கலம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கோயிலின் ரத பிரமோ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் கைது

செய்யாறு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்தில் தகராறு: ஊழியா்களைத் தாக்கி மிரட்டல்

செய்யாற்றில் தனியாா் பேருந்தில் தகராறு செய்து, பேருந்து ஊழியா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சிறாா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், எச்... மேலும் பார்க்க