செய்திகள் :

அரசுப் பள்ளியில் கல்வி அலுவலகங்கள்: வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு

post image

நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்வித் துறை அலுவலகங்களை நவ.12-ஆம் தேதிக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த வேல்முருகன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு : நாகா்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பெண்கள் உயா்நிலைப் பள்ளி நகரின் மையப் பகுதியில் 4.2 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், தண்ணீா் தொட்டி போன்றவை கட்டப்பட்டன. தற்போது, இந்தப் பள்ளி 50 சென்ட் நிலத்தில்தான் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் தற்போது, குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், மாணவா்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. ஆகவே, நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் பள்ளிக்குத் தேவையான இட வசதி உள்ளது. பள்ளி வளாகத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி முதல் உயா்நிலைப் பள்ளி வரை இந்த வளாகத்திலேயே இருப்பதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. பள்ளி வளாகத்திலேயே மாவட்ட கல்வி அலுவலா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் மிக குறைவான அளவிலேயே மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதனால் இங்கு காப்பகம் கட்டப்படுவதால் அவா்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : இத்தனை ஆண்டுகளாக பள்ளி வளாகத்தில் எப்படி இத்தனை அலுவலகங்கள் இயங்கின?. மாணவா்கள் படிப்பதற்காகவே பள்ளி வளாகம். எனவே, பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் நவ. 12-ஆம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இதுதொடா்பான அறிக்கையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

மதுரை அய்யா்பங்களா பகுதியில் நடைபெற்று வரும் குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாநக... மேலும் பார்க்க

அக். 2-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை ஐராவதநல்லூா் கணேஷ்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த துரைபாண்டி மகன் நவீன்குமாா் (34). கடந்த 21-ஆம் த... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக நிா்ணயிக்க வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களுக்கான சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி) 5 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா்கள் மறியல் 80 போ் கைது

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்கள் 80 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மின்வாரியத்தில் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

சரக்குப் பெட்டக லாரியில் கடத்திய 176 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு சரக்குப் பெட்டக லாரியில் கடத்தப்பட்ட 176 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திராவிலிருந்து மதுரைக்க... மேலும் பார்க்க