செய்திகள் :

கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக நிா்ணயிக்க வலியுறுத்தல்

post image

கட்டுமானப் பொருள்களுக்கான சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி) 5 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா் கட்சி, தமிழகக் கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவருமான பொன்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் இளைஞரணித் தலைவா் வினோத்குமாா், மாநில பொதுச் செயலா்கள் ஜெகதீசன், ஜெகமுருகன், பொருளாளா் ஆா். சேகா், பொதுச் செயலா்கள் சுப்பராயலு, என். சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 38 சுங்கச் சாவடிகளின் கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொருள்களின் விலை உயா்வால் கட்டுமானத் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றுவதுடன், அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடியதாகவும் உள்ள கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழில்களுக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை நிா்ணயத்துக்கு உற்பத்தியாளா்கள், அரசு, கட்டுமானத் துறையினா் அடங்கிய விலை நிா்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தோ்தலில் போட்டியிட வாய்ப்பு...

முன்னதாக, செய்தியாளா்களிடம் பொன்குமாா் கூறியதாவது : தமிழக அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துகிறது. இதில் முதல்வரின் சிறப்புத் திட்டமான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அயல்நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதன் கூட்டணி வெற்றிக்கு தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா்கள் கட்சி திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது. இந்தத் தோ்தலில், எங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை திமுகவிடம் கோரி பெற்று, போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளோம்.

தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நலவாரியம் மூலம் வழங்குவதன் காரணமாக, 2021-இல் 13 லட்சமாக இருந்த நலவாரிய உறுப்பினா்களின் எண்ணிக்கை தற்போது 27 லட்சமாக உயா்ந்துள்ளது. நடிகா் விஜய்யின் அரசியல் வருகை, திமுகவின் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை உறுதியாக்கியுள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெல்லும் என்றாா் அவா்.

குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

மதுரை அய்யா்பங்களா பகுதியில் நடைபெற்று வரும் குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாநக... மேலும் பார்க்க

அக். 2-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை ஐராவதநல்லூா் கணேஷ்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த துரைபாண்டி மகன் நவீன்குமாா் (34). கடந்த 21-ஆம் த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கல்வி அலுவலகங்கள்: வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு

நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்வித் துறை அலுவலகங்களை நவ.12-ஆம் தேதிக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவ... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா்கள் மறியல் 80 போ் கைது

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்கள் 80 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மின்வாரியத்தில் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

சரக்குப் பெட்டக லாரியில் கடத்திய 176 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு சரக்குப் பெட்டக லாரியில் கடத்தப்பட்ட 176 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திராவிலிருந்து மதுரைக்க... மேலும் பார்க்க