செய்திகள் :

பிகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓவைசி!

post image

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஓவைசி எழுதிய கடிதத்துக்கு ஆர்ஜேடி இதுவரை பதிலளிக்காததால் தனித்துப் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓரிரு மாதங்களில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இதனிடையே, இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சிக்கு பலமுறை கடிதம் எழுதியும் அவர்கள் பதிலளிக்கவில்லை என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.

மேலும், பிகார் தேர்தலில் போட்டியிட வெறும் 6 தொகுதிகள்தான் கேட்டதாகவும், அமைச்சர் பதவி வேண்டாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் ஓவைசி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ‘சீ​மாஞ்​சல் நியாய யாத்​திரை' என்ற பெயரில் 3 நாள் பிரசாரத்தை பிகாரில் ஓவைசி நேற்று தொடங்கியுள்ளார். இதன்மூலம், சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்துப் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவிகின்றது.

கடந்த முறை பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஓவைசி கட்சி, 5 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Asaduddin Owaisi's AIMIM party plans to contest the Bihar assembly elections independently.

இதையும் படிக்க : எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது! திரைத் துறை பட்டியல்!

15 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! தனியார் கல்வி மைய இயக்குநர் தலைமறைவு

புது தில்லி: தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த தனியார் பொறியியல் மையத்தின் இயக்குநர் சைதான்யானந்த் சரஸ்வதி, 15 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாகியிருக்... மேலும் பார்க்க

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது! சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக பிகாரில்...

பிகார் மாநிலம், பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க