செய்திகள் :

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது! சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக பிகாரில்...

post image

பிகார் மாநிலம், பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.

சூடுபிடிக்கும் பிகார் தேர்தல்

பிகார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் நடைபெறுவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக, காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம் பிகாரில் 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், சுதந்திரத்துக்குப் பிறகு தற்போது கூடியுள்ளது.

இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய மையமாக கருதப்படும் சதகத் ஆசிரமத்தில் நடைபெற்று வரும் செயற்குழுக் கூட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி உள்பட 170 நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தின் முடிவில், வாக்குத் திருட்டு, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் உள்ளிட்டவைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிகார் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்தும், ஆர்ஜேடி - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

கடந்த மாதம் பிகாரில் ராகுல் காந்தி தலைமையில் 16 நாள்கள், 1,300 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்ட வாக்காளர் உரிமைப் பேரணி குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளது.

தெலங்கானா வியூகம்

தெலங்கானா மாநிலத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தின் முடிவில், பொதுக் கூட்டம் கூட்டப்பட்டு, சோனியா காந்தி உரையாற்றினார். அந்த கூட்டத்திலேயே தேர்தல் வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து, தேர்தலில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதியை தோற்கடித்தது, ரேவந்த் ரெட்டியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

The Congress Working Committee meeting is underway in Patna.

இதையும் படிக்க : பிகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓவைசி!

ஆன்லைன் சூதாட்டம்: 3 மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கைது; தெலங்கானா சிஐடி அதிரடி!

இணைய செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆப்ரேட்டர்களை தெலங்கானா குற்றப் புலனாய்வுத் துறை(சிஐடி) அதிகாரிகள் கைது செய்தனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையா... மேலும் பார்க்க

கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?

பெங்களூரில் கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மூலமாக ரூ. 14 லட்சம் மோசடி நடந்துள்ளது. விரைந்து புகார் அளித்ததன்பேரில் அவரது பணம் மீட்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பண மோசடிகள் நாளுக்கு நாள் அ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனடி உதவியை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு அந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டார். சோலப்பூர் மாவட்டத்தின... மேலும் பார்க்க

15 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! தனியார் கல்வி மைய இயக்குநர் தலைமறைவு

புது தில்லி: தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த தனியார் பொறியியல் மையத்தின் இயக்குநர் சைதான்யானந்த் சரஸ்வதி, 15 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாகியிருக்... மேலும் பார்க்க

பிகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓவைசி!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது.இந்தியா கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஓவைசி எழுதிய கடிதத்துக்கு ஆர்ஜேடி இதுவரை பதில... மேலும் பார்க்க

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க