செய்திகள் :

15 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! தனியார் கல்வி மைய இயக்குநர் தலைமறைவு

post image

புது தில்லி: தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த தனியார் பொறியியல் மையத்தின் இயக்குநர் சைதான்யானந்த் சரஸ்வதி, 15 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாகியிருக்கிறார்.

மாணவிகளிடமிருந்து இது தொடர்பாக புகார் வந்திருப்பதாகவும், இதுவரை 12 முதல் 15 மாணவிகளை இவர் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இது தொடர்பாக முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாகவும், பிஜிடிஎம் படிப்புகளில் படித்து வந்த மாணவிகளை இவர் துன்புறுத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதுவரை 32 மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் 17 பேர், சின்மயானந்த் சரஸ்வதி தங்களிடம் மோசமாக நடந்து கொள்வார், வாட்ஸ்ஆப்களில் மோசமான தகவல்களை அனுப்புவார் என்று குற்றம்சாட்டியிருப்பதாகத் தெரிகிறது.

மேலும், இயக்குநரின் விருப்பத்துக்கு இணங்கும்படி, கல்வி மைய ஊழியர்களும் பேராசிரியர்களும் நிர்பந்தித்ததாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சைதான்யானந்த் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரது இருப்பிடங்களில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின்போது, சின்மயானந்த் பயன்படுத்தி வந்த போலியான ஐநா நம்பர் பலகையுடன் கூடிய வால்வோ கார் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது.

தலைமறைவான சைதான்யானந்த்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றி யாருக்கேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படியும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Chaitanyananda Saraswati, director of a private engineering institute in Delhi's Vasant Kunj area, is absconding after being accused of sexually harassing 15 girls.

இதையும் படிக்க.. ஜிஎஸ்டி 2.0: ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை குறைந்தது! விலைகளில் நடந்த மேஜிக்

ஆன்லைன் சூதாட்டம்: 3 மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கைது; தெலங்கானா சிஐடி அதிரடி!

இணைய செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆப்ரேட்டர்களை தெலங்கானா குற்றப் புலனாய்வுத் துறை(சிஐடி) அதிகாரிகள் கைது செய்தனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையா... மேலும் பார்க்க

கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?

பெங்களூரில் கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மூலமாக ரூ. 14 லட்சம் மோசடி நடந்துள்ளது. விரைந்து புகார் அளித்ததன்பேரில் அவரது பணம் மீட்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பண மோசடிகள் நாளுக்கு நாள் அ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனடி உதவியை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு அந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டார். சோலப்பூர் மாவட்டத்தின... மேலும் பார்க்க

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது! சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக பிகாரில்...

பிகார் மாநிலம், பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

பிகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓவைசி!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது.இந்தியா கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஓவைசி எழுதிய கடிதத்துக்கு ஆர்ஜேடி இதுவரை பதில... மேலும் பார்க்க

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க