செய்திகள் :

ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" - இபிஎஸ் தாக்கு

post image

'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நேற்று நண்பகல் குன்னூரில் உரை நிகழ்த்திய எடப்பாடி பழனிசாமி, அதனைத் தொடர்ந்து ஊட்டியிலும் உரை நிகழ்த்தினார்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க- வைப் பிளக்க எல்லா வகையிலும் சதி செய்து வருகிறது தி.மு.க. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தி.மு.க கூட்டணியில்தான் பிளவு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியில் பங்கு வேண்டும் என இப்போதே காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தால் தி.மு.க கூட்டணியில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஒருநாளைக்கு ஒரு திட்டம் என்கிற அடிப்படையில் ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், எந்தத் திட்டமும் செயல்பாட்டில் இல்லை.

வீண் விளம்பரங்களுக்காகவே இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம், இலவச வேட்டி, சேலை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார்கள். ஊட்டி மெடிக்கல் காலேஜ் இதற்குச் சிறந்த உதாரணம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்" என்றார்.

H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

தற்போது உலகம் முழுக்கவே H-1B விசா குறித்து பேச்சுகள் சுற்றி வருகின்றன. கடந்த 22-ம் தேதி முதல், புதிய ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் செல்பவர்கள் 1 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க... மேலும் பார்க்க

தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்" - குஷ்பு

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவை பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகி... மேலும் பார்க்க

கூடலூர்: மனிதர்களைத் தாக்கி வந்த யானை ராதாகிருஷ்ணன்; கும்கிகளின் உதவியோடு வனத்துறை பிடித்தது எப்படி?

நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். தென்னிந்திய யானை வழித்தடங்களின் இதயம் என்று அழைக்கப்படும் கூடலூர் அருகில் உள்... மேலும் பார்க்க

ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு: `இந்தியாவின் அதிக எரிசக்தி தேவை புரிகிறது!' - ரூபியோ கருத்து

நேற்று முன்தினம் அமெரிக்கா நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இவர்கள் இருவரும் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், மு... மேலும் பார்க்க

தமிழக பாஜக: அடுத்தடுத்த டெல்லி விசிட்; நயினாரின் திட்டம் என்ன?

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் வெளியேறல், முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் என தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சலசலப்புகள் நீடித்து வருகின்றன. இந்தப் பரபர... மேலும் பார்க்க

விஜய் என்ன சொல்றது... திமுகவை எங்கள் கூட்டணியால் தான் வீழ்த்தமுடியும் - வானதி சீனிவாசன் பளிச்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜிஎஸ்டி வரி குறைப்பால் வியாபாரம், பொருளாதாரம் வளரும். வரி குறைப்பினால் உற்பத்தி பெருகும். மக... மேலும் பார்க்க