செய்திகள் :

ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு: `இந்தியாவின் அதிக எரிசக்தி தேவை புரிகிறது!' - ரூபியோ கருத்து

post image

நேற்று முன்தினம் அமெரிக்கா நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.

இவர்கள் இருவரும் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், முக்கியமான கனிமங்கள் ஆகியன குறித்து விவாதித்தனர்.

இந்த நிலையில், நேற்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மார்கோ ரூபியோ இந்தியா மீதான அமெரிக்காவின் வரி குறித்து பேசியுள்ளார்.

ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ
ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ

மார்கோ ரூபியோவிடம் ரஷ்யா மீது வரி விதிப்பது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "ஐரோப்ப நாடுகளும் ரஷ்யா மீது வரி விதிப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

இப்போதும், ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகள் ரஷ்யாவில் இருந்து மிகப்பெரிய அளவில் எண்ணெயையும், இயற்கை எரிவாயுவையும் வாங்கி வருகிறது. இது அபத்தமானது.

ஆனால், அமெரிக்காவை இன்னும் அதிக வரிகளை விதிக்க கேட்கிறார்கள். ஆனால், ஐரோப்பாவில் பல நாடுகள் அப்படி செய்வதில்லை" என்று பதிலளித்துள்ளார்.

இந்தியா மீதான வரி

மேலும், இந்தியா மீதான வரிகள் குறித்து, "இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதுதான் இந்திய - அமெரிக்க உறவில் விரிசல் உண்டானதற்கான முக்கிய காரணம்.

இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவை இருக்கிறது என்று புரிகிறது. ஆனால், அதற்காக தள்ளுபடி விலையில், ரஷ்ய எண்ணெயை வாங்குவது ரஷ்யாவின் போருக்கு உதவுவதாக அமையும்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவும், அமெரிக்காவும் முக்கிய கூட்டாளிகள். ஆனால், எல்லாவற்றிலும் 100 சதவிகிதம் ஒத்துப்போக முடியாது.

அதுவும் குறிப்பாக எரிசக்தி விஷயத்தில், இன்னும் பல விற்பனையாளர்கள் உள்ளனர். இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும் என்று நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.

ஆக, இந்திய - அமெரிக்க வரி பிரச்னை சரியாவதற்கான வாய்ப்பு உண்டு என்று ஹின்ட் கொடுத்திருக்கிறார் மார்கோ ரூபியோ.

H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

தற்போது உலகம் முழுக்கவே H-1B விசா குறித்து பேச்சுகள் சுற்றி வருகின்றன. கடந்த 22-ம் தேதி முதல், புதிய ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் செல்பவர்கள் 1 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க... மேலும் பார்க்க

தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்" - குஷ்பு

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவை பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகி... மேலும் பார்க்க

கூடலூர்: மனிதர்களைத் தாக்கி வந்த யானை ராதாகிருஷ்ணன்; கும்கிகளின் உதவியோடு வனத்துறை பிடித்தது எப்படி?

நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். தென்னிந்திய யானை வழித்தடங்களின் இதயம் என்று அழைக்கப்படும் கூடலூர் அருகில் உள்... மேலும் பார்க்க

ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" - இபிஎஸ் தாக்கு

'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்... மேலும் பார்க்க

தமிழக பாஜக: அடுத்தடுத்த டெல்லி விசிட்; நயினாரின் திட்டம் என்ன?

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் வெளியேறல், முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் என தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சலசலப்புகள் நீடித்து வருகின்றன. இந்தப் பரபர... மேலும் பார்க்க

விஜய் என்ன சொல்றது... திமுகவை எங்கள் கூட்டணியால் தான் வீழ்த்தமுடியும் - வானதி சீனிவாசன் பளிச்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜிஎஸ்டி வரி குறைப்பால் வியாபாரம், பொருளாதாரம் வளரும். வரி குறைப்பினால் உற்பத்தி பெருகும். மக... மேலும் பார்க்க