செய்திகள் :

'இது இந்துக்கள் - இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னை இல்லை'- உணவு ஆர்டர் குறித்து சாக்‌ஷி அகர்வால்

post image

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி மாடலிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் கடந்த ஞாயிற்று கிழமை ( செப்.21) தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார்.

சாக்ஷி அகர்வால் பகிர்ந்த புகைப்படம்
சாக்ஷி அகர்வால் பகிர்ந்த புகைப்படம்

அதில், “ப்யூர் வெஜிடேரியனான நான் ஆர்டர் செய்த உணவில் சிக்கன் இருந்தது. அந்த உணவை இப்போது தான் தூக்கி எறிந்தேன். இதற்கு உணவு டெலிவரி நிறுவனமான Swiggy நிறுவனம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எனது மத நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.

சாக்ஷி அகர்வாலின் இந்தப் பதிவிற்கு சிலர் ஆதரவாகவும் பலர் அவருக்கு எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் விளக்கம் அளித்து தனது யூ-டியூப் சேனலில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் சாக்ஷி அகர்வால், "கடந்த ஞாயிற்றுக்கிழமை Swiggy மூலம் நான் பனீர் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் வந்ததோ சிக்கன்.

நான் என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை. ஆர்டர் செய்த உணவில் மோசமான மணம் வந்ததுடன், பனீரின் சுவையிலும் வித்தியாசம் இருந்ததால் சுதாரித்துக்கொண்டு சோதித்துபார்த்தேன்.

அது சிக்கன் எனத் தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன். நான் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு, சைவம் அசைவம் உண்பவர்களுக்கு இடையேயான பிரச்னையோ, இந்துக்கள் - இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னையோ இல்லை.

சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வால்

வாடிக்கையாளருக்கும் மோசமான வாடிக்கையாளர் சேவைக்குமான பிரச்னை. உணவென்பது ஒருவரின் தனியுரிமை. அதில் அசைவம் சாப்பிடாதது என் உரிமை.

உணவு என்பது நம் உணர்வு மட்டுமன்றி, நம்பிக்கை, கலாசாரம், மத உணர்வுகளையும் சார்ந்தது என்பதால் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

நாராயணமூர்த்தி மறைவு: ``கலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர்'' - காயத்ரி ஜெயராம் இரங்கல்

'மனதை திருடிவிட்டாய்' இயக்குநர் நாராயணமூர்த்தி மறைவிற்கு நடிகை காயத்ரி ஜெயராம் இரங்கல் தெரிவித்திருக்கிறார். 2001 ஆம் ஆண்டு பிரபுதேவா, வடிவேலு, காயத்ரி ஜெயராம், கெளசல்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரை... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: "சாய் பல்லவி, எஸ்.ஜே. சூர்யா, லிங்குசாமி" - தொடர்ந்து வெளியாகும் பட்டியல்

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கலைமாமணி விருது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விரு... மேலும் பார்க்க

National Awards: ``இரண்டு பெண்களிடமிருந்து விருது பெற்றிருப்பது பெருமை!'' - விருது வென்ற பின் ஊர்வசி

71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக் கான், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர் ... மேலும் பார்க்க

Parthiban: "முதலில் இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்" - வதந்தி குறித்துக் கொதிக்கும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் ஒரே ஆளை மட்டும் நடிக்க வைத்துப் படும் எடுப்பது, சிங்கிள் ஷாட்டில் எடுப்பது என வித்தியாசமாகத் திரைப்படங்களை எடுப்பவர் இரா. பார்த்திபன்.30 ஆண்டுகளாக இயக்குநராகவும், நடிகராகவும் திரைத்து... மேலும் பார்க்க

The U1niverse Tour: சென்னை முதல் துபாய் வரை கான்சர்ட் நடத்தும் யுவன் - எப்போது தெரியுமா?

இசை நிகழ்ச்சி நடத்தும் கலாசாரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இசைக் கலைஞர்கள் வெறும் பாடல் பாடுவதோடு நிறுத்தி விடாமல், மேடைகளில் அதனை ஒரு கலை நிகழ்ச்சியாக அரங்கேற்றுகின... மேலும் பார்க்க