செய்திகள் :

உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க வைத்த கணவன்

post image

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கொண்டு வராத பெண்ணை தனி அறையில் அடைத்து பாம்பை விட்டுக் கடிக்க வைத்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கான்பூரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண் ஷாநவாஸ் என்பவரைச் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் நடந்த சிறிது நாட்களில் ரேஷ்மாவிடம் அவரது வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கணவன் வீட்டார் சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர். வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டவேண்டும் என்று கூறி ரூ.1.50 லட்சம் வாங்கி வரும்படி ரேஷ்மாவிடம் கேட்டுக்கொண்டனர்.

வரதட்சணை கொடுமை
வரதட்சணை கொடுமை

ரேஷ்மாவின் பெற்றோர் அதனைக் கொடுத்தனர். அதன் பிறகு மேலும் ரூ.5 லட்சம் கேட்டனர். ஆனால் அந்தத் தொகையை ரேஷ்மாவின் பெற்றோர் கொடுக்கவில்லை. இதையடுத்து ரேஷ்மாவைத் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று ரேஷ்மாவை இரவில் தனி அறையில் போட்டு அடைத்தனர். அந்த அறைக்குள் ரேஷ்மாவின் கணவர் குடும்பத்தார் பாம்பை உள்ளே விட்டனர். நள்ளிரவில் பாம்பு ரேஷ்மாவைக் கடித்துவிட்டது. உடனே வலியில் ரேஷ்மா கதறித் துடித்தார். ஆனால் அவருக்கு ரேஷ்மாவின் கணவர் குடும்பத்தார் உதவாமல் ரேஷ்மாவின் அறைக்கு வெளியில் நின்று சிரித்துக்கொண்டிருந்தனர். இதனால் ரேஷ்மா தனது சகோதரிக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.

ரேஷ்மாவின் சகோதரி ரிஷ்வானா விரைந்து வந்து தனது சகோதரியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ரேஷ்மா கொடுத்துள்ள புகாரின் பேரில் போலீஸார் ரேஷ்மாவின் கணவர், கணவரின் பெற்றோர், சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டெல்லி ஆசிரமத்தில் ரெய்டு: கல்லூரி மாணவிகள் 17 பேருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தலைமறைவு

டெல்லியைச் சேர்ந்த மதகுரு சுவாமி சைதன்யானந்தா என்று அழைக்கப்படும் பார்த்த சாரதி சொந்தமாக மேனேஜ்மெண்ட் கல்லூரி ஒன்றின் நிர்வாகியாக இருந்து வருகிறார். வசந்த் குஞ்ச் பகுதியில் செயல்படும் ஸ்ரீ சாரதா இன்ஸ்... மேலும் பார்க்க

போலீஸிடம் தங்க மோசடி செய்த சகோதரிகள் - கைதான பின்னணி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜார்ஜ் பிரபு (37). இவர், கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியிலிருந்த அந்தோணி ஜார்ஜ் பிரபுவுக்கு கடந... மேலும் பார்க்க

குடியாத்தம்: தந்தை முகத்தில் மிளகாய் பொடி அடித்து குழந்தை கடத்தல் - பதற வைத்த சிசிடிவி காட்சிகள்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது 33). பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலைப் பார்த்து வரும் வேணு, கடந்த 5 ஆண்டுகளாக வீ... மேலும் பார்க்க

`தலைமுடி உதிர்வு' - தீக்குளித்து உயிரை மாய்த்த கல்லூரி மாணவி; குமரியில் அதிர்ச்சி - என்ன நடந்தது?

உயிரை மாய்த்த கல்லூரி மாணவி அஸ்வினிகன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வன். இவரது மனைவி ரூபி ஆன்றணி பாய். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஞானசெல்வன் வெளிநா... மேலும் பார்க்க

தருமபுரி குழந்தை திருமணம்: கடமையைச் செய்யாமல் இருக்க `லஞ்சம்' - பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவுக்காவிற்கு உட்பட்ட கெண்டிகானஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கிற நிர்மல்குமார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் க... மேலும் பார்க்க

உபி: காதலியைக் கொன்று உடலுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்; யமுனையில் தேடும் போலீஸ்! - என்ன நடந்தது?

உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் காவல்துறையினர் 20 வயது பெண் கொலை வழக்கில் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். அகன்ஷா என்ற அந்த 22 வயது பெண்ணின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு யமுனா நதியில் மூழ்கடிக்கப்பட்டு... மேலும் பார்க்க