செய்திகள் :

அறநிலையத் துறை நிதியில் திருமணங்கள்! இபிஎஸ் மீது துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்!

post image

அறநிலையத் துறையின் நிதியைப் பயன்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புவது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார்.

சென்னையில் அறநிலையத் துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கும் நிகழ்ச்சி, சென்னை கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

``சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று கல்லூரிகளைத் திறந்தால், கோயில் நிதியில் ஏன் கல்லூரியைத் திறக்கிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.

அறநிலையத் துறையின் நிதியை, குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்தக் கூடாது; அது எப்படி நியாயம்? என்றும் கேட்கிறார்.

ஆனால், அறநிலையத் துறையின் பணம் - மக்களுக்குத் தான் சொந்தம் என்றும், கல்விக்குப் பயன்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இன்று, அறநிலையத் துறையின் சார்பில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதிலும், அறநிலையத் துறை நிதியை எப்படி திருமணங்களுக்குப் பயன்படுத்துவீர்கள் என்று கேட்பார்போல'' என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!

DCM Udhayanidhi Stalin criticises ADMK Secretary Edappadi Palaniswami

விராலிமலை: கி.பி 13 ஆம் நூற்றாண்டு வீரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள மைலாப்பட்டி மலை மீது சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்துத் தானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.பேராசிரியர் மு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.2,885 கோடியில் திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, புதிய திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 14) தொடக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி... மேலும் பார்க்க

பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன்: விஜய்

பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.பெரம்பலூருக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் செய்யாமல் சென்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி செப். 16-ல் தில்லி பயணம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செப். 16) தில்லி செல்கிறார்.அண்மையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், அதிமுக பொதுச் ... மேலும் பார்க்க

விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

திமுக அரசை குற்றம் சுமத்துவதற்கு முன்பாக, தவெக தலைவர் விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.பெசன்ட் நகர் கடற்கரையில் “உலக தற்க... மேலும் பார்க்க

உலகளவில் சாதனை படைத்த விஜய்யின் விமானம்!

சென்னையில் இருந்து திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய்யின் விமானத்தை ஒரே நேரத்தில் அதிகளவில் ட்ராக் செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அத... மேலும் பார்க்க