செய்திகள் :

விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

post image

திமுக அரசை குற்றம் சுமத்துவதற்கு முன்பாக, தவெக தலைவர் விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பெசன்ட் நகர் கடற்கரையில் “உலக தற்கொலை தடுப்பு” வார விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்றார்.

இதனைத் தொடந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”உலக தற்கொலை தடுப்பு வாரத்தை ஒட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு என்பது அவசியமான ஒன்று. விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்கொலை எண்ணம் வராமல் தடுத்தல், தற்கொலை எந்த விஷயத்திற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்துதல் போன்ற விஷயங்களை விழிப்புணர்வு மூலம் எடுத்துச் செல்வதற்கு பல்வேறு வகைகளில் மனநல மருத்துவமனையும் நம்முடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தற்கொலைகள் நிகழ்ந்திருக்கிற ஆண்டாக இருந்திருக்கிறது.

நேற்றைய நாள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சியைவிட தமிழகத்தின் வளர்ச்சி அதிகம். விஜய் போன்றவர்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை விஜய் மறந்துவிடக் கூடாது, அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன; நிறைவேற்றவில்லை என்று கூறும் விஜய்க்கு அந்த உண்மை தெரியும்” என்றார்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் பெருமை! இளையராஜாவுக்கு முதல்வர் பாராட்டு!

Minister M. Subramanian criticizes Thaweka leader Vijay.

விராலிமலை: கி.பி 13 ஆம் நூற்றாண்டு வீரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள மைலாப்பட்டி மலை மீது சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்துத் தானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.பேராசிரியர் மு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.2,885 கோடியில் திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, புதிய திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 14) தொடக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி... மேலும் பார்க்க

பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன்: விஜய்

பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.பெரம்பலூருக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் செய்யாமல் சென்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி செப். 16-ல் தில்லி பயணம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செப். 16) தில்லி செல்கிறார்.அண்மையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், அதிமுக பொதுச் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை நிதியில் திருமணங்கள்! இபிஎஸ் மீது துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்!

அறநிலையத் துறையின் நிதியைப் பயன்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புவது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார்.சென்னையில் அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க

உலகளவில் சாதனை படைத்த விஜய்யின் விமானம்!

சென்னையில் இருந்து திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய்யின் விமானத்தை ஒரே நேரத்தில் அதிகளவில் ட்ராக் செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அத... மேலும் பார்க்க