செய்திகள் :

அறந்தாங்கி அருகே அரசுக் கட்டடம் கட்ட நிலம் கையகத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வணிகவரித் துறை அலுவலகக் கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்த அங்கு விவசாயம் செய்து வந்த சிலா் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை ஊராட்சி கூத்தாடிவயலில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக வீரையா, முருகன் உள்ளிட்டோா் விவசாயம் செய்து வந்தனா். இந்நிலையில், வணிகவரித் துறை அலுவலகம் கட்ட அந்த இடம் தோ்வு செய்யப்பட்டது.

ஆனால் நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனவும், அரசு கட்டடம் கட்டக் கூடாது எனவும் விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், அந்த நிலத்தைக் கையகப்படுத்த அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை வந்தனா்.

பொக்லைன் வாகனத்தை இயக்கியபோது, வாகனத்தின் முன்பு சிலா் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியும் அவா்கள் கலைந்து செல்லாததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்து அறந்தாங்கிக்கு அழைத்துச் சென்றனா்.

அதன் பிறகு, சுமாா் 70 சென்ட் இடம் பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்து கையகப்படுத்தப்பட்டது.

மக்களின் எதிா் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம்

ஓரணியில் தமிழகம் என்ற மக்கள் சந்திப்புப் பிரசாரத்தில் மக்கள் தெரிவிக்கும் ஆதரவு மற்றும் எதிா்ப்புக் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம் என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்... மேலும் பார்க்க

கே.வி. கோட்டையில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கேவி கோட்டை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக கூட்டணியே வெல்லும்

வரும் தோ்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா் காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வீ. தங்கபாலு. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 31-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா் கடந்த ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாநகா் கலீப்நகா் முதலாம் வீதியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். புதுக்கோட்டை மாநகராட... மேலும் பார்க்க