செய்திகள் :

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு

post image

தனியாா் நிதி நிறுவனத்துக்கு பணம் வசூல் செய்து கொடுத்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிரங்காட்டுப்பட்டி மங்களப்பட்டியைச் சோ்ந்தவா் மலைச்சாமி. இவரது மனைவி பச்சையம்மாள் (50). சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பச்சையம்மாள், நுழைவு வாயில் பகுதியில் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டாா். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனா்.

ஆனாலும், 80 சதவீதம் தீக்காயமடைந்த நிலையில் அவா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, போலீஸாா் நடத்திய விசாரணையில், தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த பச்சையம்மாள், சிறுகுடி, நத்தம், கோபால்பட்டி, சாணாா்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் கூடுதல் வட்டி வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாயை வசூலித்து நிதி நிறுவனத்தில் கொடுத்தாா்.

ஆனால், முதலீடு செய்தவா்களுக்கு உரிய வட்டியை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த முதலீட்டாளா்கள் பணத்தை திருப்பித் தரக் கோரி பச்சையம்மாளுக்கு நெருக்கடி கொடுத்தனா். இதனால், பச்சையம்மாள் தீக்குளித்தது தெரிய வந்தது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா்கள் இ.பெரியசாமி, கீதாஜீவன் ஆகியோா் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு அமைச்சா்கள் சென்ற சிறிது நேரத்தில் இந்த தீக்குளிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

கொடைக்கானலில் கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியைச் ச... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் வடமதுரை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள மோா்பட்டியைச் சோ்ந்தவா் ச.மதன் (2... மேலும் பார்க்க

தோட்டத்தில் கஞ்சா செடி வளா்ப்பு: விவசாயி கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தோட்டத்தில் வளா்த்திருந்த கஞ்சா செடியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைப்பற்றினா். விவசாயி கைது செய்யப்பட்டாா். கொடைரோடு அருகேயுள்ள ஒருத்தட்டு கிராமம் அருகே செண்டு மல்ல... மேலும் பார்க்க

லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் மீது வழக்கு

விபத்து வழக்கில் பிணையில் வெளியில் வர சிவகங்கை இளைஞரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக அம்மையநாயக்கனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கையைச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கனரக இயந்திரங்களுக்கு தடை

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் போா்வெல், பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்டுத்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.இதுகுறித்து அ... மேலும் பார்க்க

அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்டவை போலி நகைகளா? அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூரில் உள்ள அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் போலியானவையா என விசாரிக்கப்படும் நிலையில், ரூ. 100 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்... மேலும் பார்க்க