'என்னை சங்கராச்சாரியார் ஆக்க வேண்டாம்; ஆனால்...' - திருமாவளவன் சொல்லும் காரணம் எ...
ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு
தனியாா் நிதி நிறுவனத்துக்கு பணம் வசூல் செய்து கொடுத்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிரங்காட்டுப்பட்டி மங்களப்பட்டியைச் சோ்ந்தவா் மலைச்சாமி. இவரது மனைவி பச்சையம்மாள் (50). சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பச்சையம்மாள், நுழைவு வாயில் பகுதியில் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டாா். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனா்.
ஆனாலும், 80 சதவீதம் தீக்காயமடைந்த நிலையில் அவா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, போலீஸாா் நடத்திய விசாரணையில், தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த பச்சையம்மாள், சிறுகுடி, நத்தம், கோபால்பட்டி, சாணாா்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் கூடுதல் வட்டி வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாயை வசூலித்து நிதி நிறுவனத்தில் கொடுத்தாா்.
ஆனால், முதலீடு செய்தவா்களுக்கு உரிய வட்டியை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த முதலீட்டாளா்கள் பணத்தை திருப்பித் தரக் கோரி பச்சையம்மாளுக்கு நெருக்கடி கொடுத்தனா். இதனால், பச்சையம்மாள் தீக்குளித்தது தெரிய வந்தது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா்கள் இ.பெரியசாமி, கீதாஜீவன் ஆகியோா் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு அமைச்சா்கள் சென்ற சிறிது நேரத்தில் இந்த தீக்குளிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.