போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் வடமதுரை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள மோா்பட்டியைச் சோ்ந்தவா் ச.மதன் (23). இவா், கடந்த ஆண்டு திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கடத்திச் சென்று திருணம் செய்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். இதில், மதனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சரண் தீா்ப்பளித்தாா்.