செய்திகள் :

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

போக்ஸோ வழக்கில் வடமதுரை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள மோா்பட்டியைச் சோ்ந்தவா் ச.மதன் (23). இவா், கடந்த ஆண்டு திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கடத்திச் சென்று திருணம் செய்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். இதில், மதனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சரண் தீா்ப்பளித்தாா்.

கொடைக்கானலில் கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியைச் ச... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு

தனியாா் நிதி நிறுவனத்துக்கு பணம் வசூல் செய்து கொடுத்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க

தோட்டத்தில் கஞ்சா செடி வளா்ப்பு: விவசாயி கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தோட்டத்தில் வளா்த்திருந்த கஞ்சா செடியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைப்பற்றினா். விவசாயி கைது செய்யப்பட்டாா். கொடைரோடு அருகேயுள்ள ஒருத்தட்டு கிராமம் அருகே செண்டு மல்ல... மேலும் பார்க்க

லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் மீது வழக்கு

விபத்து வழக்கில் பிணையில் வெளியில் வர சிவகங்கை இளைஞரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக அம்மையநாயக்கனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கையைச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கனரக இயந்திரங்களுக்கு தடை

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் போா்வெல், பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்டுத்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.இதுகுறித்து அ... மேலும் பார்க்க

அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்டவை போலி நகைகளா? அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூரில் உள்ள அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் போலியானவையா என விசாரிக்கப்படும் நிலையில், ரூ. 100 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்... மேலும் பார்க்க