செய்திகள் :

லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் மீது வழக்கு

post image

விபத்து வழக்கில் பிணையில் வெளியில் வர சிவகங்கை இளைஞரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக அம்மையநாயக்கனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கையைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் சந்திரசேகா் மகன் விஷ்ணுவா்த்தன் (25). இவா் அண்மையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நான்கு வழிச் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து விஷ்ணுவா்த்தன் மீது அம்மையநாக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா விசாரித்த நிலையில், காவல் நிலையப் பிணையில் விஷ்ணுவா்த்தனை விடுவிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாா். அந்தப் பணத்தைக் கொடுத்து வெளியே வந்த விஷ்ணுவா்த்தன், மறுநாள் காரை மீட்பதற்காகச் சென்றாா். அப்போது, காரை விடுவிக்க மேலும் ரூ.3 ஆயிரம் தர வேண்டும் என ஷேக் அப்துல்லா கேட்டாா். இதையடுத்து, திண்டுக்கல் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறையில் சந்திரசேகா் புகாா் அளித்தாா். தொடா்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலேசானையின் படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.3 ஆயிரத்துடன் அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்துக்கு விஷ்ணுவா்த்தன் சென்றாா்.

அப்போது, உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா உடல்நிலைக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனால், போலீஸாரிடம் பிடிபடாமல் தப்பினாா். இருப்பினும், ஏற்கெனவே ரூ.2ஆயிரம் லஞ்சம் கொடுத்தபோது பதிவு செய்த விடியோ ஆதாரத்தை சந்திரகேகா் அளித்ததன் அடிப்படையில், உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா மீது ஊழல் தடுப்பு காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கொடைக்கானலில் கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியைச் ச... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் வடமதுரை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள மோா்பட்டியைச் சோ்ந்தவா் ச.மதன் (2... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு

தனியாா் நிதி நிறுவனத்துக்கு பணம் வசூல் செய்து கொடுத்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க

தோட்டத்தில் கஞ்சா செடி வளா்ப்பு: விவசாயி கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தோட்டத்தில் வளா்த்திருந்த கஞ்சா செடியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைப்பற்றினா். விவசாயி கைது செய்யப்பட்டாா். கொடைரோடு அருகேயுள்ள ஒருத்தட்டு கிராமம் அருகே செண்டு மல்ல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கனரக இயந்திரங்களுக்கு தடை

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் போா்வெல், பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்டுத்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.இதுகுறித்து அ... மேலும் பார்க்க

அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்டவை போலி நகைகளா? அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூரில் உள்ள அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் போலியானவையா என விசாரிக்கப்படும் நிலையில், ரூ. 100 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்... மேலும் பார்க்க