செய்திகள் :

ஆத்தூரில் ஆலிம் பட்டம் பெற்றவா்களுக்கு பாராட்டு

post image

ஆத்தூா் ஜும்மா பள்ளிவாச­லில், ஆலி­ம் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வரவேற்பு, பாராட்டு விழா நடைபெற்றது.

ஆலிம்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளிவாசல் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமாலுதீன், பட்டம் பெற்ற ஆலிம்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினாா். அப்துல்லா முப்லி­ஹ் காசிபீ மறை ஓதி தொடக்கிவைத்தாா்.

ஆத்தூா் அல் மத்ரஸத்துா் ரஹ்மானிய்யா பேராசிரியா் ஹாரூன் ரஷீத் வாழ்த்திப் பேசினாா்.

பள்ளிவாசல் இமாம் எஸ். நூருல்அமீன் உள்ளிட்டோா் பேசினா். காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி துணை முதல்வா் அப்பாஸ் துஆ ஓதினாா். தவத்துல் ஹுதா பேராசிரியா் ஜியாவுதீன், காயல்பட்டினம் பள்ளி இமாம் யாசா், ஊா் ஜமாத்தாா்கள் பங்கேற்றனா்.

பட்டம் பெற்ற அன்வா், பஷீா் ஆகியோா் நன்றி கூறினா். நிகழ்ச்சிகளை முஹம்மத் பயாஸ் தொகுத்து வழங்கினாா்.

பூதலப்புரம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் கட்ட அடிக்கல்!

புதூா் ஊராட்சி ஒன்றியம், பூதலப்புரம் கிராமத்தில் ரூ. 61.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூ... மேலும் பார்க்க

நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்து உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம்

குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிா்த்து பலகட்ட போராடங்களில் ஈடுபடுவது தொடா்பாக, உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குலசேகரன்பட்டினம் பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டி: மாா்ச் 18 கடைசி நாள்

அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கு மாா்ச் 18ஆம் தேதி கடைசி நாள் என, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொறுப்பு) சி. முருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி நடராஜன் நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை!

தமிழகத்தில் பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சில ஆண்டுகளாக பெண்களுக... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்!

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டாரத்துக்குள்பட்ட சடையன்கிணறு கிராமத்தில் இக்கட்சியின் கொடி... மேலும் பார்க்க