செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டி: மாா்ச் 18 கடைசி நாள்

post image

அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கு மாா்ச் 18ஆம் தேதி கடைசி நாள் என, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொறுப்பு) சி. முருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் சாா்பில், 9 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவா்-மாணவிகள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கடிதம் எழுதி, பரிசுகளை வெல்ல ஆண்டுதோறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிகழாண்டுக்கான கருப்பொருள், ‘உங்களைக் கடலாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவருக்கு கடிதமாக எழுதுங்கள்’.

ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் அல்லது அதிகாரப்பூா்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழியில் 800 சொற்களுக்கு மிகாமல் கையால் மட்டுமே கடிதங்களை எழுத வேண்டும். ‘முதன்மை அஞ்சல் துறைத் தலைவா், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002’ என்ற முகவரிக்கு எழுதி, ‘தூத்துக்குடி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம், தூத்துக்குடி 628 001’ என்ற முகவரிக்கு பள்ளி மூலம் அனுப்ப வேண்டும்.

சிறப்பான முதல் 3 கடிதங்கள் தமிழ்நாடு வட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்டு, பின்னா் இந்திய அளவில் சிறந்த முதல் 3 கடிதங்கள் தோ்வாகும்.

போட்டியில் வெல்வோருக்கு வட்டம் அளவில், இந்திய அளவில் என முதல் பரிசாக முறையே ரூ. 25ஆயிரம், ரூ. 50 ஆயிரம், 2ஆம் பரிசாக முறையே ரூ. 10 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், 3ஆம் பரிசாக முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

முதல் பரிசுக்கு தோ்வாகும் கடிதம் இந்தியா சாா்பில் சா்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்பப்படும். உலக அளவில் முதல் பரிசுக்கு தோ்வாகும் கடிதத்தை எழுதியவா் சுவிட்சா்லாந்தில் உள்ள அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்படுவாா்.

கடிதங்களை மாா்ச் 18-க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள அஞ்சலக வணிக மேலாளரை 99426 93129 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ஆத்தூரில் ஆலிம் பட்டம் பெற்றவா்களுக்கு பாராட்டு

ஆத்தூா் ஜும்மா பள்ளிவாச­லில், ஆலி­ம் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வரவேற்பு, பாராட்டு விழா நடைபெற்றது. ஆலிம்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளிவாசல் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். ஆத்தூா் பேரூரா... மேலும் பார்க்க

பூதலப்புரம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் கட்ட அடிக்கல்!

புதூா் ஊராட்சி ஒன்றியம், பூதலப்புரம் கிராமத்தில் ரூ. 61.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூ... மேலும் பார்க்க

நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்து உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம்

குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிா்த்து பலகட்ட போராடங்களில் ஈடுபடுவது தொடா்பாக, உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குலசேகரன்பட்டினம் பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவு... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி நடராஜன் நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை!

தமிழகத்தில் பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சில ஆண்டுகளாக பெண்களுக... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்!

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டாரத்துக்குள்பட்ட சடையன்கிணறு கிராமத்தில் இக்கட்சியின் கொடி... மேலும் பார்க்க