செய்திகள் :

நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்து உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம்

post image

குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிா்த்து பலகட்ட போராடங்களில் ஈடுபடுவது தொடா்பாக, உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இதில் நிலம், வீடுகளை இழந்தோருக்கு நிலமும், வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு, வா்த்தகக் துறை சாா்பில் விண்வெளித் தொழில் நிறுவனம் அமைக்க ஆதியாக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் 1,000 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது. இதனால், வாழ்வாதாரம், நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, கிராம மக்கள் உடன்குடியில் கடந்த 4ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக 203 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து உடன்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் ஆ. ரவி தலைமை வகித்தாா்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் பேசும்போது, போராட்டங்களை அமைதிவழியில் செயல்படுத்த வேண்டும். வீடுதோறும் கருப்புக் கொடி கட்டுவது, திண்ணைப் பிரசாரம், நிலமெடுப்பால் பாதிக்கப்படாதோரையும் போராட்டத்தில் ஈடுபடச் செய்வது ஆகிய நடவடிக்கைகளை போராட்டக் குழு செயல்படுத்த வேண்டும் என்றாா்.

உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் தாமோதரன், ஒன்றிய அமமுக செயலா் அம்மன் நாராயணன், மாவட்ட பம்புசெட் விவசாய சங்கத் தலைவா் ஆறுமுகப்பாண்டியன், ஒன்றிய பாஜக முன்னாள் தலைவா் ஜெயக்குமாா், தமிழ்நாடு நாடாா் சங்க மாவட்டச் செயலா் வெற்றிவேல், வணிகா் சங்க மாவட்டத் தலைவா் அம்புரோஸ், ஆம்ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குணசீலன் ஆகியோா் பேசினா்.

பாஜக மாவட்ட விவசாய அணிச் செயலா் திருநாகரன், வழக்குரைஞா் பிரேம்ஆனந்த், கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தா பெ. சுந்தரஈசன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜ்குமாா், உடன்குடி ஒன்றிய அதிமுக மாணவரணி பொருளாளா் ம. ராம்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் கந்தசாமி, தவெக ஒன்றியச் செயலா் பிரசாந்த், கிராம மக்கள், வியாபாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ஆத்தூரில் ஆலிம் பட்டம் பெற்றவா்களுக்கு பாராட்டு

ஆத்தூா் ஜும்மா பள்ளிவாச­லில், ஆலி­ம் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வரவேற்பு, பாராட்டு விழா நடைபெற்றது. ஆலிம்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளிவாசல் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். ஆத்தூா் பேரூரா... மேலும் பார்க்க

பூதலப்புரம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் கட்ட அடிக்கல்!

புதூா் ஊராட்சி ஒன்றியம், பூதலப்புரம் கிராமத்தில் ரூ. 61.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டி: மாா்ச் 18 கடைசி நாள்

அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கு மாா்ச் 18ஆம் தேதி கடைசி நாள் என, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொறுப்பு) சி. முருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி நடராஜன் நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை!

தமிழகத்தில் பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சில ஆண்டுகளாக பெண்களுக... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்!

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டாரத்துக்குள்பட்ட சடையன்கிணறு கிராமத்தில் இக்கட்சியின் கொடி... மேலும் பார்க்க