செய்திகள் :

ஆபாசப் பதிவுகளுக்கு கட்டுப்பாடு: ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

post image

புது தில்லி : ஓடிடி தளங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசம் நிறைந்த பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு தரப்பிலிருந்து ஓடிடி தள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, ஓடிடி தளங்களுக்கு மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஓடிடி தளங்கள் ஐடி சட்டங்கள் - 2021இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நன்னடத்தை நெறிமுறைகளுக்கு உள்பட்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள பதிவுகளை வெளியிடுவது குறித்து ஓடிடி தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு.

மேற்கண்ட தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை வயது ரீதியாக பகுத்து அவை அனைத்து வயதினரும் பார்ப்பதற்கு உகந்ததா என்பதை கவனத்திர்கோளவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏ சான்றிதழ் கொண்ட பதிவுகளை வெளியிடும்போது அதிக கவனம் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களில் செயல்படும் தன்னாட்சி நிறுவனங்கள் மேற்கண்ட தளங்களில் நன்னடத்தை விதிகளை மீறி செயல்படும்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஓடிடி தளங்கள் அநாகரீகமான, ஆபாசம் நிறைந்த மற்றும் பாலியல் பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் மக்கள் தரப்பிலிருந்தும் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்சி பள்ளி தொடங்க மாநில அரசு அனுமதி தேவையில்லை!

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநில அரசின் அனுமதியில்லாமல், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்றும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி... மேலும் பார்க்க

பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!

பெங்களூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.தில்லியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் பெங்களூரில் கேட்டரிங் தொழிலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஒரு கல்லூரி சந... மேலும் பார்க்க

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க