செய்திகள் :

ஆர்டிஐ-ன் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணை!

post image

அரசியல் கட்சிகளை ஆர்டிஐ-ன் கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி, தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் 21 அன்று முதல் விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று (பிப். 14) தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ஏப்ரல் 21 அன்று தொடங்கும் வாரத்தில் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிக்க | விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

தேசிய, மாநில அரசியல் கட்சிகளை ஆர்டிஐ சட்டத்தின்படி பொது அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றம் அறிவிக்கக் கோரி மனுதாரர்களான ஜனநாயக சீர்திருத்த சங்கம், வழக்குரைஞர் அஸ்வினி குமார் மற்றும் பலரும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காங்கிரஸ், பாஜக மற்றும் பல கட்சிகள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசு மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொண்டுவர கோரிக்கை வைத்து ரிட் மனு பெற முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது.

அரசியலமைப்பு முழுவதும் அரசியல் கட்சிகளைச் சுற்றியே உள்ளது என்பதை உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் உபாத்யாய் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க | 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது: அமித் ஷா!

"அரசியல் கட்சிகள் தொடர்ந்து பொதுக் கடமைகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ளன. பொது நலனுக்காக அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் அவசியம். எனவே, ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 2(ஹெச்)-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் அவற்றைக் கொண்டுவரவேண்டும்” என்று மனுவில் உபாத்யாய் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29ஏ-ன் கீழ் ஒரு சங்கம் அல்லது தனிநபர் அமைப்பு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் ஒரு அரசியல் கட்சியின் அந்தஸ்தைப் பெறுகிறது.

பூடான் பெட்ரோல் விலை: இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவருக்கு அதிர்ச்சி!

இந்தியாவிலேயே சில மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கும் கீழ் இருந்துகொண்டிருந்தாலும், பூடானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலைதான் இன்றைய ஹாட் டாப்பிக்.பிகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேச... மேலும் பார்க்க

அதென்ன 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?

இந்தியாவில், குடியரசுத் தலைவர் தொடங்கி, நாட்டின் மிக முக்கிய பதவியை வகிப்பவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் பல வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.ஒருவருக்கு எந்தவிதம... மேலும் பார்க்க

அதானி குழும லாரியால் இருவர் பலி! 8 வாகனங்களை எரித்து கலவரம்!

மத்தியப் பிரதேசத்தில் கனரக லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.மத்தியப் பிரதேசத்தில் சிங்ரௌலி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி இருவர் மீதும் ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியது!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் தொடங்கின. நாடு முழுவதும... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் நியமித்துள்ளார்.மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். ... மேலும் பார்க்க

அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அமிருதசரஸ்: நாடு கடத்தும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு ... மேலும் பார்க்க