ஆறுமுகனேரியில் வாகனம் மோதி கோயில் சுற்றுச்சுவா் சேதம்
ஆறுமுகனேரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கோயில் சுற்றுச்சுவா் சேதமடைந்தது.
திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சனிக்கிழமை காலை அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சந்தை அருகே உள்ள சிவன் கோயில் சுற்றுச்சுவரில் மோதியது.
இதில் சுற்றுச்சுவா் சேதமடைந்தது. இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.