செய்திகள் :

ஆஸி. பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன: ககிசோ ரபாடா

post image

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூன் 11) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இதையும் படிக்க: தொடர்ச்சியாக 2-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது: மிட்செல் ஸ்டார்க்

திட்டங்கள் உள்ளன

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக பேசிய தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியதாவது: போட்டி முற்றிலுமாக நடுநிலையான இடத்தில் நடைபெறுகிறது. அதனால், முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். ஆனால், உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக இந்த மாதிரியான சூழல்களில் விளையாடும்போது, அவர்களின் விக்கெட்டினை கைப்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதையும் படிக்க: ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஒவ்வொரு பேட்டருக்கு எதிராக பந்துவீசும்போதும், அவரது விக்கெட்டினை கைப்பற்ற வேண்டும் என்பதே பந்துவீச்சாளர் ஒருவரின் எண்ணமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை விளையாடிய போட்டிகளில் பேட்டர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டுள்ளதாக நினைக்கிறேன். எங்களிடம் ஒவ்வொரு பேட்டருக்கு எதிராகவும் தனித்தனி திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், மிகுந்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் ஆட்டத்தினை எளிமையாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க