Ahmedabad Plane Crash: "அந்த ஒருவரைப் பார்த்தேன்; உடல்களை மீட்கும் பணி முடிந்துவ...
ஆஸி. பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன: ககிசோ ரபாடா
ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூன் 11) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: தொடர்ச்சியாக 2-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது: மிட்செல் ஸ்டார்க்
திட்டங்கள் உள்ளன
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக பேசிய தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியதாவது: போட்டி முற்றிலுமாக நடுநிலையான இடத்தில் நடைபெறுகிறது. அதனால், முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். ஆனால், உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக இந்த மாதிரியான சூழல்களில் விளையாடும்போது, அவர்களின் விக்கெட்டினை கைப்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இதையும் படிக்க: ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஒவ்வொரு பேட்டருக்கு எதிராக பந்துவீசும்போதும், அவரது விக்கெட்டினை கைப்பற்ற வேண்டும் என்பதே பந்துவீச்சாளர் ஒருவரின் எண்ணமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை விளையாடிய போட்டிகளில் பேட்டர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டுள்ளதாக நினைக்கிறேன். எங்களிடம் ஒவ்வொரு பேட்டருக்கு எதிராகவும் தனித்தனி திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், மிகுந்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் ஆட்டத்தினை எளிமையாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.